குறள் 392

கல்வி

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு

yennaenpa yaenai yeluththaenpa ivvirandum
kannaenpa vaalum uyirkku


Shuddhananda Bharati

Education

Letter, number, art and science
Of living kind both are the eyes.


GU Pope

Learning

The twain that lore of numbers and of letters give
Are eyes, the wise declare, to all on earth that live.

Letters and numbers are the two eyes of man.


Mu. Varadarajan

எண்‌ என்று சொல்லப்படுவன, எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இருவகைக்‌ கலைகளையும்‌ வாழும்‌ மக்களுக்குக்‌ கண்கள்‌ என்று கூறுவர்‌.


Parimelalagar

எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும் - அறியாதார் எண் என்று சொல்லுவனவும் மற்றை எழுத்து என்று சொல்லுவனவம் ஆகிய கலைகள் இரண்டினையும்; வாழும் உயிர்க்குக் கண் என்ப - அறிந்தார் சிறப்புடை உயிர்கட்குக் கண் என்று சொல்லுவர்.
விளக்கம்:
(எண் என்பது கணிதம் அது கருவியும் செய்கையும் என இருவகைப்படும்; அவை ஏரம்பம் முதலிய நூல்களுள் காண்க. எழுத்து எனவே, அதனோடு ஒற்றுமையுடைய சொல்லும் அடங்கிற்று. இவ்விருதிறமும், அறமுதற்பொருள்களைக் காண்டற்குக் கருவியாகலின், 'கண்' எனப்பட்டன. அவை கருவியாதல் ''ஆதி முதலொழிய அல்லாதன எண்ணி, நீதி வழுவா நிலைமையவால் - மாதே, அறமார் பொருள் இன்பம் வீடு என்று இவற்றின், திறமாமோ எண்ணிறத்தால் செப்பு." "எழுத்தறியத் தீரும் இழிதகைமை, தீர்ந்தான், மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும், மொழித்திறத்தின், முட்டறுத்த நல்லோன் முதல் நூல் பொருள் உணர்ந்து, கட்டறுத்து வீடு பெறும்." இவற்றான் அறிக. 'என்ப' என்பவற்று, முன்னைய இரண்டும் அஃறிணைப் பன்மைப் பெயர்; பின்னது உயர்திணைப் பன்மை வினை. அறியாதார், அறிந்தார் என்பன வருவிக்கப்பட்டன. சிறப்புடைய உயிர் என்றது மக்கள் உயிருள்ளும் உணர்வு மிகுதி உடையதனை. இதனால் கற்கப்படும் நூல்கட்குக் கருவியாவனவும் அவற்றது இன்றியமையாமையும் கூறப்பட்டன.)


Manakkudavar

(இதன் பொருள்) எண்ணென்று சொல்லப்படுவனவும் மற்றை எழுத்தென்று சொல்லப்படுவனவுமாகிய இவ்விரண்டு பொருளையும் உலகின்கண் வாழுமுயிர் களுக்குக் கண்ணென்று சொல்லுவர் அறிவோர்,
(என்றவாறு).