குறள் 391

கல்வி

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

katrka kachadarak katrpavai katrrapin
nitrka athatrkuth thaka


Shuddhananda Bharati

Education

Lore worth learning, learn flawlessly
Live by that learning thoroughly.


GU Pope

Learning

So learn that you may full and faultless learning gain,
Then in obedience meet to lessons learnt remain.

Let a man learn thoroughly whatever he may learn, and let his conduct be worthy of his learning.


Mu. Varadarajan

கற்கத்‌ தகுந்த நூல்களைக்‌ குற்றமறக்‌ கற்க வேண்டும்‌; அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்குத்‌ தக்கவாறு நெறியில்‌ நிற்க வேண்டும்‌.


Parimelalagar

கற்பவை கசடு அறக் கற்க - ஒருவன் கற்கப்படும் நூல்களைப் பழுதறக் கற்க; கற்றபின் அதற்குத் தக நிற்க - அங்ஙனம் கற்றால், அக்கல்விக்கத் தக அவை சொல்லுகின்ற நெறிக் கண்ணே நிற்க.
விளக்கம்:
('கற்பவை' என்றதனான், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் உணர்த்துவன அன்றிப் பிறபொருள் உணர்த்துவன, சின்னாள் பல்பிணிச் சிற்றறிவினர்க்கு ஆகா என்பது பெற்றாம். கசடறக் கற்றலாவது: விபரீத ஐயங்களை நீக்கி மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல். நிற்றலாவது: இல்வாழ்வுழிக் "கருமமும் உள்படாப் போகமும் துவ்வாத், தருமமும் தக்கார்க்கே செய்" தலினும், (நாலடி. 250) துறந்துழித் தவத்தான் மெய் உணர்ந்து அவா அறுத்தலினும் வழுவாமை சிறப்புடை மகற்காயின் கற்றல் வேண்டும் என்பதூஉம், அவனால் கற்கப்படும் நூல்களும், அவற்றைக் கற்குமாறும், கற்றதனால் பயனும் இதனாற் கூறப்பட்டன.)


Manakkudavar

கல்வியாவது கல்வியாமாறும் அதனானாகிய பயனுங் கூறுதல். இது முதல் லாகப் பொருள் வரவு இயற்றுந் திறங் கூறுகின்றாராதலின், அஃதியற்றுங்கால் கல்வி முந்துற வேண்டும்; அதனால், இது முன் கூறப்பட்டது. (இதன் பொருள்) கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க; கற்றபின்பு அக்கல்விக் குத் தக வொழுக,
(என்றவாறு) இது கற்கவும் வேண்டும்; அதனைக் கடைப்பிடிக்கவும் வேண்டுமென்றது.