குறள் 39

அறன்வலியுறுத்தல்

அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல

araththaan varuvathae inpammatr raellaam
puraththa pukalum ila


Shuddhananda Bharati

The power of virtue

Weal flows only from virtue done
The rest is rue and renown gone.


GU Pope

Assertion of the Strength of Virtue

What from virtue floweth, yieldeth dear delight;
All else extern, is void of glory's light.

Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise.


Mu. Varadarajan

அறநெறியில்‌ வாழ்வதன்‌ பயனாக வருவதே இன்பமாகும்‌; அறத்தோடு பொருந்தாமல்‌ வருவன எல்லாம்‌ இன்பம்‌ இல்லாதவை; புகழும்‌ இல்லாதவை.


Parimelalagar

அறத்தான் வருவதே இன்பம்-இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பம் ஆவது; மற்று எல்லாம் புறத்த-அதனோடு பொருந்தாது வருவன எல்லாம் இன்பம் ஆயினும் துன்பத்தினிடத்த; புகழும் இல-அதுவேயும் அன்றிப் புகழும் உடைய அல்ல.
விளக்கம்:
(ஆன்' உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக்கண் வந்தது, "தூங்கு கையான் ஓங்கு நடைய" (புறநா.22) என்புழிப்போல. இன்பம்-காம நுகர்ச்சி; அஃது ஆமாறு காமத்துப்பாலின் முதற்கண் சொல்லுதும். இன்பத்தின் புறம் எனவே, துன்பம் ஆயிற்று. பாவத்தான் வரும் 'பிறனில் விழைவு' முதலாயின அக்கணத்துள் இன்பமாய்த் தோன்றும் ஆயினும், பின் துன்பமாய் விளைதலின், 'புறத்த' என்றார். அறத்தோடு வாராதன 'புகழும் இல' எனவே, வருவது புகழும் உடைத்து என்பது பெற்றாம். இதனான் அறம் செய்வாரே இம்மை இன்பமும் புகழும் எய்துவர் என்பது கூறப்பட்டது.


Manakkudavar

(இதன் பொருள்) அறத்தால் வருவது யாதொன்றும், அதுவே இன்பமும் புகழுமாம்; அதனாலன்றி வருவன வெல்லாந் துன்பமாம்; புகழுமிலவாம்,
(என்றவாறு). இஃது எல்லாப் போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது.