குறள் 38

அறன்வலியுறுத்தல்

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்

veelnaal pataaamai nanraatrrin akhthoruvan
vaalnaal valiyataikkum kal


Shuddhananda Bharati

The power of virtue

Like stones that block rebirth and pain
Are doing good and good again.


GU Pope

Assertion of the Strength of Virtue

If no day passing idly, good to do each day you toil,
A stone it will be to block the way of future days of moil.

If one allows no day to pass without some good being done, his conduct will be a stone to block up the passage to other births.


Mu. Varadarajan

ஒருவன்‌ அறம்‌ செய்யத்‌ தவறிய நாள்‌ ஏற்படாதவாறு அறத்தைச்‌ செய்வானானால்‌ அதுவே அவன்‌ உடலோடு வாழும்‌ நாள்‌ வரும்‌ பிறவி வழியை அடைக்கும்‌ கல்லாகும்‌.


Parimelalagar

வீழ் நாள் படாமை நன்று ஆற்றின்-செய்யாது கழியும் நாள் உளவாகாமல் ஒருவன் அறத்தைச் செய்யுமாயின்; அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல்-அச்செயல் அவன் யாக்கையோடு கூடும் நாள் வரும் வழியை வாராமல் அடைக்குங் கல்லாம்.
விளக்கம்:
(ஐவகைக் குற்றத்தான் வரும் இரு வகை வினையும் உள்ள துணையும், உயிர் யாக்கையோடும் கூடி நின்று, அவ்வினைகளது இருவகைப் பயனையும் நுகரும் ஆகலான், அந்நாள் முழுவதும் 'வாழ்நாள்' எனப்பட்டது. குற்றங்கள் ஐந்து ஆவன: அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பு என்பன. இவற்றை வடநூலார் 'பஞ்சக்கிலேசம்' என்பர். வினை இரண்டு ஆவன: நல்வினை தீவினை என்பன. பயன் இரண்டு ஆவன: இன்பம் துன்பம் என்பன. இதனால் அறம் வீடு பயக்கும் என்பது கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒருவன் ஒருநா ளிடைவிடாமல் நன்மையைச் செய்வானாயின், அச் செயல் அவனது பிறப்பும் இறப்புமாகிய நாள் வருகின்ற வழியை யடைப்ப தொரு கல்லாம், (எ-று) : இது வீடு தருமென்றது.