குறள் 387

இறைமாட்சி

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு

insolaal eeththalikka vallaarkkuth thansolaal
thaankan danaiththiv vulaku


Shuddhananda Bharati

The grandeur of monarchy

The world commends and acts his phrase
Who sweetly speaks and gives with grace.


GU Pope

The Greatness of a King

With pleasant speech, who gives and guards with powerful liberal hand,
He sees the world obedient all to his command.

The world will praise and submit itself to the mind of the king who is able to give with affability, andto protect all who come to him.


Mu. Varadarajan

இனிய சொற்களுடன்‌ தக்கவர்க்குப்‌ பொருளை உதவிக்‌ காக்கவல்ல அரசனுக்கு இவ்வுலகம்‌ தன்‌ புகழோடு தான்‌ கருதியபடி அமைவதாகும்‌.


Parimelalagar

இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு - இனிய சொல்லுடனே ஈதலைச் செய்து அளிக்கவல்ல அரசனுக்கு; இவ்வுலகு தன் சொலால் தான் கண்டனைத்து - இவ்வுலகம் தன் புகழோடு மேவித் தான் கருதிய அளவிற்றாம்.
விளக்கம்:
(இன்சொல்: கேள்வியினும் வினையினும் இனியவாய சொல். ஈதல்: வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தல். அளித்தல்: தன் பரிவாரத்தானும் பகைவரானும் நலிவுபடாமல் காத்தல். இவை அரியவாகலின் 'வல்லாற்கு' என்றும், அவன் மண் முழுவதும் ஆளும் ஆகலின் 'இவ்வுலகு' என்றும் கூறினார். கருதிய அளவிற்றாதல் - கருதிய பொருள் எல்லாம் சுரத்தல்.) --


Manakkudavar

(இதன் பொருள்) இனிய சொல்லோடே கொடுத்துத் தலையளி செய்ய வல்ல அரச னுக்குத் தன்னேவலாலே இவ்வுலகம் தான் கண்டாற்போலும் தன் வசத்தே கிடக்கும்,
(என்றவாறு)