குறள் 385

இறைமாட்சி

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு

iyatrralum eetdalung kaaththalum kaaththa
vakuththalum valla tharasu


Shuddhananda Bharati

The grandeur of monarchy

The able king gets, stores and guards
And spends them for people's safeguards.


GU Pope

The Greatness of a King

A king is he who treasure gains, stores up, defends,
And duly for his kingdom's weal expends.

He is a king who is able to acquire (wealth), to lay it up, to guard, and to distribute it.


Mu. Varadarajan

பொருள்‌ வரும்‌ வழிகளை மேன்மேலும்‌ இயற்றலும்‌ வந்த பொருள்களைச்‌ சேர்த்தலும்‌, காத்தலு காத்தவற்றை வகுத்துச்‌ செலவு செய்தலும்‌ வல்லவன்‌ அரசன்‌.


Parimelalagar

இயற்றலும் - தனக்குப் பொருள்கள் வரும் வழிகளை மேன்மேல் உளவாக்கலும்; ஈட்டலும் - அங்ஙனம் வந்தவற்றை ஒருவழித் தொகுத்தலும்; காத்தலும் - தொகுத்தவற்றை பிறர் கொள்ளாமல் காத்தலும்; காத்த வகுத்தலும் - காத்தவற்றை அறம், பொருள், இன்பங்களின் பொருட்டு விடுத்தலும்; வல்லது அரசு - வல்லவனே அரசன்.
விளக்கம்:
(ஈட்டல், காத்தல் என்றவற்றிற்கு ஏற்ப, 'இயற்றல்' என்பதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. (பொருள்களாவன; மணி, பொன், நெல் முதலாயின. அவை வரும் வழிகளாவன; பகைவரை அழித்தலும், திறை கோடலும், தன் நாடு தலையளித்தலும் முதலாயின. 'பிறர்' என்றது பகைவர், கள்வர், சுற்றத்தார். வினைசெய்வார் முதலாயினார். கடவுளர், அந்தணர், வறியோர் என்று இவர்க்கும் புகழிற்கும் கொடுத்தலை அறப்பொருட்டாகவும்; யானை, குதிரை, நாடு, அரண் என்று இவற்றிற்கும், பகையொடு கூடலின் பிரிக்கப்படுவார்க்கும், தன்னில் பிரிதலின் கூட்டப்படுவார்க்கும் கொடுத்தலைப் பொருட் பொருட்டாகவும்; மண்டபம், வாவி, செய்குன்று, இளமரக்கா முதலிய செய்தற்கும், ஐம்புலன்களான் நுகர்வனவற்றிற்கும் கொடுத்தலை இன்பப் பொருட்டாகவும் கொள்க. இயற்றல் முதலிய தவறாமல் செய்தல் அரிதாகலின், 'வல்லது' என்றார். இவை நான்கு பாட்டானும் மாட்சியே கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பொருள் வரும்வழியியற்றலும், அதனை அழியாமலீட்ட லும், அதனைச் சோர்வுபடாமற் காத்தலும், காத்த அதனை வேண்டுவனவற்றிற்குப் பகுத்தலும் வல்லவன் அரசனாவான்,
(என்றவாறு). பகுத்தல் - யானை குதிரை முதலிய படைக்குக் கொடுத்து அவையிற்றை யுண்டாக்குதல். இது பண்டாரங் கூறுமாறு கூறிற்று.