குறள் 384

இறைமாட்சி

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு

aranilukkaa thallavai neekki maranilukkaa
maanam utaiya tharasu


Shuddhananda Bharati

The grandeur of monarchy

A brave noble king refrains from vice
Full of virtue and enterprise.


GU Pope

The Greatness of a King

Kingship, in virtue failing not, all vice restrains,
In courage failing not, it honour's grace maintains.

He is a king who, with manly modesty, swerves not from virtue, and refrains from vice.


Mu. Varadarajan

ஆட்சி முறைக்கு உரிய அறத்தில்‌ தவறாமல்‌, அறமல்லாதவற்றை நீக்கி, வீரத்தில்‌ குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன்‌ ஆவான்‌.


Parimelalagar

அறன் இழுக்காது - தனக்கு ஓதிய அறத்தின் வழுவாது ஒழுகி; அல்லவை நீக்கி - அறனல்லவை தன் நாட்டின் கண்ணும் நிகழாமல் கடிந்து; மறன் இழுக்கா மானம் உடையது அரசு - வீரத்தின் வழுவாத தாழ்வு இன்மையினை உடையான் அரசன்.
விளக்கம்:
(அவ்வறமாவது. ஓதல், வேட்டல், ஈதல் என்னும் பொதுத் தொழிலினும்; படைக்கலம் பயிறல், பல் உயிரோம்பல், பகைத்திறம் தெறுதல் என்னும் சிறப்புத் தொழிலினும் வழுவாது நிற்றல். 'மாண்ட, அறநெறி முதற்றே அரசின் கொற்றம்" (புற நா. 65) என்பதனால், இவ்வறம் பொருட்குக் காரணமாதல் அறிக. அல்லவை, கொலை, களவு முதலாயின. குற்றமாய மானத்தின் நீக்குதற்கு, 'மறன் இழுக்கா மானம்' என்றார். அஃதாவது, "வீறின்மையின் விலங்காம்என மதவேழமும் எறியான் - ஏறுண்டவர் நிகராயினும் பிறர் மிச்சில் என்று எறியான் - மாறன்மையின் மறம்வாடும் என்று இளையாரையும் எறியான் - ஆறன்மையின் முதியாரையும் எறியான் அயில் உழவன்" (சீவக. மண்மக. 159) எனவும், "அழியுநர் புறக்கொடை அயில்வேல் ஓச்சான்" (பு.வெ. வஞ்சி. 20) எனவும் சொல்லப்படுவது. அரசு: அரசனது தன்மை; அஃது உபசார வழக்கால் அவன்றன்மேல் நின்றது.)


Manakkudavar

(இதன் பொருள்) அறத்திற் றப்பாமலொழுகி, அறமல்லாத காம வெகுளியைக் கடிந்து, மறத்திற் றப்பாத மானத்தையுடையவன் அரசன்,
(என்றவாறு).