குறள் 354

மெய்யுணர்தல்

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு

aiyunarvu yeithiyak kannum payaminrae
maeiyunarvu illaa thavarkku


Shuddhananda Bharati

Truth consciousness

Knowledge of five senses is vain
Without knowing the Truth within.


GU Pope

Knowledge of the True

Five-fold perception gained, what benefits accrue
To them whose spirits lack perception of the true?

Even those who have all the knowledge which can be attained by the five senses, will derive no benefit from it, if they are without a knowledge of the true nature of things.


Mu. Varadarajan

மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஜந்து புலன்களின்‌ வேறுபாட்டால்‌ வளர்ந்த ஐந்துவகை உணர்வும்‌ முற்றப்பெற்ற போதிலும்‌ பயன்‌ இல்லை.


Parimelalagar

ஐ உணர்வு எய்தியக்கண்ணும் பயம் இன்றே - சொல்லப்படுகின்ற புலன்கள் வேறுபாட்டான் ஐந்தாகிய உணர்வு அவற்றைவிட்டுத் தம் வயத்ததாய வழியும், அதனால் பயனில்லையேயாம்; மெய்யுணர்வு இல்லாதவர்க்கு - மெய்யினையுணர்தல் இல்லாதார்க்கு.
விளக்கம்:
(ஐந்தாகிய உணர்வு: மனம். அஃது எய்துதலாவது, மடங்கி ஒரு தலைப்பட்டுத் தாரணைக்கண் நிற்றல். அங்ஙனம் நின்ற வழியும் வீடு பயவாமையின், 'பயம் இன்று' என்றார். சிறப்பு உம்மை எய்துதற்கு அருமை விளக்கி நின்றது. இவை இரண்டு பாட்டானம் மெய்யுணர்வு உடையார்க்கே வீடு உளது என மெய் உணர்வின் சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) மெய் முதலாகிய பொறிகளைந்தினானும் அறியப்படுவனவெல்லாம் அறிந்தவிடத்தும், அதனான் ஒருபய னுண்டாகாது; உண்மையை யறியும் அறிய விலாதார்க்கு ,
(என்றவாறு).