குறள் 353

மெய்யுணர்தல்

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து

aiyaththin neengkith thaelindhthaarkku vaiyaththin
vaanam naniya thutaiththu


Shuddhananda Bharati

Truth consciousness

To doubtless minds whose heart is clear
More than earth heaven is near.


GU Pope

Knowledge of the True

When doubts disperse, and mists of error roll
Away, nearer is heav'n than earth to sage's soul.

Heaven is nearer than earth to those men of purified minds who are freed from from doubt.


Mu. Varadarajan

ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகைவிட. அடையவேண்டிய மேலுலகம்‌ அண்மையில்‌ உள்ளதாகும்‌.


Parimelalagar

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு - ஐயத்தினின்று நீங்கி உணர்ந்தார்க்கு; வையத்தின் வானம் நணியது உடைத்து - எய்தி நின்ற நில உலகத்தினும் எய்தக்கடவதாய வீட்டுலகம் நணித்தாதலுடைத்து.
விளக்கம்:
(ஐயமாவது, பல தலையாய உணர்வு. அஃதாவது, மறுபிறப்பும், இருவினைப் பயனும், கடவுளும் உளவோ இலவோ என ஒன்றில் துணிவு பிறவாது நிற்றல்; 'பேய்த்தேரோ புனலோ? கயிறோ அரவோ?' எனத் துணியாது நிற்பதும் அது. ஒருவாற்றான் பிறர் மதம் களைந்து தம் மதம் நிறுத்தல் எல்லாச் சமயநூல்கட்கும் இயல்பு ஆகலின், அவை கூறுகின்ற பொருள்களுள் யாது மெய்யென நிகழும் ஐயத்தினை யோகமுதிர்ச்சி உடையார் தம் அனுபவத்தான் நீக்கி மெய்யுணர்வார் ஆகலின், அவரை 'ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்' என்றும், அவர்க்கு அவ்வனுபவ உணர்வு அடிப்பட்டு வரவரப் பண்டை உலகியல் உணர்வு தூர்ந்துவரும் ஆகலின், அதனைப் பயன் மேலிட்டு 'வையத்தின் வானம் நணியதுடைத்து' என்றும் கூறினார்; கூறவே, ஐய உணர்வும் பிறப்பிற்குக் காரணமாதல் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) மெய்ப்பொருளை ஐயப்படுதலினின்று நீங்கித் துணிந்தவர்க்கு, இவ்வுலகத்தினும் மேலுலகம் நணித்தாம் தன்மை யுடைத்து,
(என்றவாறு). துணிந்த அறிவின்கண்ண து எல்லாவுலகுமாதலின், அவ்வறிவுடையார்க்கு உலகம் ஒருங்கு தோற்றுதலின், நணித்தாமென்றவாறு. இது மெய்யுணர்வு எவ் விடமும் அறியுமென்றது.