குறள் 352

மெய்யுணர்தல்

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு

irulneengki inpam payakkum marulneengki
maacharu kaachi yavarkku


Shuddhananda Bharati

Truth consciousness

Men of spotless pure insight
Enjoy delight devoid of night.


GU Pope

Knowledge of the True

Darkness departs, and rapture springs to men who see,
The mystic vision pure, from all delusion free.

A clear, undimmed vision of things will deliver its possessors from the darkness of future births, and confer the felicity (of heaven).


Mu. Varadarajan

மயக்கம்‌ நீங்கிக்‌ குற்றம்‌ அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம்‌ மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்‌ கொடுக்கும்‌.


Parimelalagar

மருள் நீங்கி மாசு அறு காட்சியவர்க்கு - அவிச்சையின் நீங்கி மெய்யுணர்வுடையர் ஆயினார்க்கு; இருள் நீங்கி இன்பம் பயக்கும் - அம்மெய்யுணர்வு பிறப்பினை நீங்கி வீட்டினைக் கொடுக்கும்.
விளக்கம்:
(இருள்: நரகம்; அஃது ஆகுபெயராய்க் காரணத்தின்மேல் நின்றது. 'நீக்கி' எனத் தொடை நோக்கி மெலிந்து நின்றது; நீங்க என்பதன் திரிபு எனினும் அமையும். 'மருள் நீங்கி' என்னும் வினையெச்சம், 'காட்சியவரென்னும்' குறிப்பு வினைப்பெயர் கொண்டது. 'மாசு அறுகாட்சி' என்றது கேவல உணர்வினை. இதனான் வீடாவது 'நிரதிசய இன்பம்' என்பதூஉம், அதற்கு நிமித்த காரணம் கேவலப் பொருள் என்பதூஉம் கூறப்பட்டன.)


Manakkudavar

(இதன் பொருள்) மயக்கத்தினின்று நீங்கிக் குற்றமற்ற அறிவுடையார்க்கு, அறி யாமையாகிய விருள் நீங்க முத்தியாகிய இன்ப முண்டாம்,
(என்றவாறு) இது மெய்யுணர்ந்தார்க்கு வினை விட்டு முத்தியின்ப முண்டாமென்றது.