குறள் 34

அறன்வலியுறுத்தல்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற

manaththukkan maasilan aathal anaiththuaran
aakula neera pira


Shuddhananda Bharati

The power of virtue

In spotless mind virtue is found
And not in show and swelling sound.


GU Pope

Assertion of the Strength of Virtue

Spotless be thou in mind! This only merits virtue's name;
All else, mere pomp of idle sound, no real worth can claim.

Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show.


Mu. Varadarajan

ஒருவன்‌ தன்‌ மனத்தில்‌ குற்றம்‌ இல்லாதவனாக இருக்க வேண்டும்‌; அறம்‌ அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத்‌ தன்மை உடையவை.


Parimelalagar

மனத்துக்கண் மாசு இலன் ஆதல் - அவ்வாற்றான் அறஞ் செய்வான் தன் மனத்தின்கண் குற்றமுடையன் அல்லன் ஆக; அனைத்து அறன்-அவ்வளவே அறம் ஆவது; பிற ஆகுலநீர-அஃது ஒழிந்த சொல்லும் வேடமும் அறம் எனப்படா ஆரவார நீர்மைய,
விளக்கம்:
(குற்றம் தீயன சிந்தித்தல், பிறர் அறிதல் வேண்டிச் செய்கின்றன ஆகலின், 'ஆகுல நீர' என்றார். மனத்து மாசுடையன் ஆயவழி அதன்வழியே ஆகிய மொழி மெய்களால் செய்வன பயனில என்பதூஉம் பெறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒருவன் தன் மனத்தின்கட் குற்றமிலனாதலே எல்லாவறமுமாம்; அதில் அழுக்குண்டாயின், மேற் செய்வனவெல்லாம் ஆரவார நீர்மைய, (எ-று. பிறரறியவேண்டிச் செய்தானாமென்றவாறாயிற்று மேல் நான்கு பொருளைக் கடிய வேண்டுமென்றார் அவை நான்கும் மனமொன்றுந் தூயதாகப் போமென்று அதன்பின் இது கூறினார்.