குறள் 33

அறன்வலியுறுத்தல்

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்

ollum vakaiyaan aravinai oavaathae
sellumvaai yellaanj seyal


Shuddhananda Bharati

The power of virtue

Perform good deeds as much you can
Always and everywhere, o man!


GU Pope

Assertion of the Strength of Virtue

To finish virtue's work with ceaseless effort strive,
What way thou may'st, where'er thou see'st the work may thrive.

As much as possible, in every way, incessantly practise virtue.


Mu. Varadarajan

செய்யக்கூடிய வகையால்‌, எக்காரணத்தாலும்‌ விடாமல்‌ செல்லுமிடமெல்லாம்‌ அறச்செயலைப்‌ போற்றிச்‌ செய்ய வேண்டும்‌.


Parimelalagar

ஒல்லும் வகையான்-தத்தமக்கு இயலுந்திறத்தான்; அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல்-அறம் ஆகிய நல்வினையை ஒழியாதே அஃது எய்தும் இடத்தான் எல்லாம் செய்க.
விளக்கம்:
(இயலுந்திறம் ஆவது-இல்லறம் பொருள் அளவிற்கு ஏற்பவும், துறவறம் யாக்கை நிலைக்கு ஏற்பவும் செய்தல். ஓவாமை, இடைவிடாமை. எய்தும் இடம் ஆவன: மனம் வாக்குக் காயம் என்பன. அவற்றால் செய்யும் அறங்கள்ஆவன: முறையே நற்சிந்தையும் நற்சொல்லும் நற்செயலும் என இவை. இதனான் அறஞ்செய்யும் ஆறு கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) தமக்கியலுந் திறத்தானே , அறவினையை ஒழியாதே செய்யலாம் மிடமெல்லாஞ் செய்க, (எ - று ) இயலுந்திறமென்பது மனமொழி மெய்களும் பொருளும். செல்லும் வாய் என்பது அறஞ்செய்தற் கிடமாக்கிய பல விடங்களும். ஒழியாதென்றது நாடோறு மென்றது. இஃது அறம் வலி தென் றறிந்தவர்கள் இவ்வாறு செய்க வென்றது.