குறள் 319

இன்னாசெய்யாமை

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்

pirarkkinnaa mutrpakal seiyin thamakkuinnaa
pitrpakal thaamae varum


Shuddhananda Bharati

non

Harm others in the forenoon
Harm seeks thee in afternoon.


GU Pope

Not doing Evil

If, ere the noontide, you to others evil do,
Before the eventide will evil visit you.

If a man inflict sorrow upon others in the morning, it will come upon him unsought in the very evening.


Mu. Varadarajan

முற்பகலில்‌ மற்றவர்க்குத்‌ துன்பமானவற்றைச்‌ செய்தால்‌ அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள்‌ தாமாகவே வந்து சேரும்‌.


Parimelalagar

பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் - துறந்தவர் பிறர்க்கு இன்னாதனவற்றை ஒரு பகலது முற்கூற்றின்கண் செய்வராயின; தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும் - தமக்கு இன்னாதன அதன் பிற்கூற்றின்கண் அவர் செய்யாமல் தாமே வரும்.
விளக்கம்:
('முற்பகல், 'பிற்பகல்' என்பன பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. தவம் அழிதலின், அங்ஙனம் கடிதினும் எளிதினும் வரும்; அதனால், அவை செய்யற்க என்பதாம். இனி 'தானே வரும்' என்பது பாடமாயின், அச்செயல் தானே தமக்கு இன்னாதன வாய் வரும் என உபசார வழக்காக்கி, ஆக்கம் வருவித்து உரைக்க.)


Manakkudavar

(இதன் பொருள்) பிறர்க்கு இன்னாதவற்றை முற்பொழுது செய்யின், தாமே பிற் பொழுது தமக்கு இன்னாதனவாய் வரும் ; மற்றொருவன் செய்யாமல்,
(என்றவாறு) இன்னாதன் செய்ததனால் வருங் குற்றமென்னை யென்றார்க்கு , இது கூறப் பட்டது.