குறள் 315

இன்னாசெய்யாமை

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை

arivinaan aakuva thuntoh pirithinnoi
thandhnoipol potrraak katai


Shuddhananda Bharati

non

What does a man from wisdom gain
If he pines not at other's pain?


GU Pope

Not doing Evil

From wisdom's vaunted lore what doth the learner gain,
If as his own he guard not others' souls from pain?

What benefit has he derived from his knowledge, who does not endeavour to keep off pain from another as much as from himself ?


Mu. Varadarajan

மற்ற உயிரின்‌ துன்பத்தைத்‌ தன்‌ துன்பம்போல்‌ கருதிக்‌ காப்பாற்றாவிட்டால்‌, பெற்றுள்ள அறிவினால்‌ ஆகும்‌ பயன்‌ உண்டோ?


Parimelalagar

அறிவினான் ஆகுவது உண்டோ - துறந்தார்க்கு உயிர் முதலியவற்றை உள்ளவாறறிந்த அறிவினான் ஆவதொரு பயன் உண்டோ; பிறிதின் நோய் தம் நோய்போல் போற்றாக்கடை - பிறிதோர் உயிர்க்கு வரும் இன்னாதவற்றைத் தம் உயிர்க்கு வந்தன போலக் குறிக்கொண்டு காவா இடத்து ?
விளக்கம்:
(குறிக்கொண்டு காத்தலாவது: நடத்தல், இருத்தல், நிற்றல், உண்டல் முதலிய தம் தொழில்களானும், பிறவாற்றானும் உயிர்கள் உறுவனவற்றை முன்னே அறிந்து உறாமல் காத்தல். இது பெரும்பான்மையும் அஃறினைக்கண் நுண்ணிய உடம்பு உடையவற்றைப் பற்றி வருதலின் பொதுப்படப் 'பிறிதின் நோய்' என்றும், 'மறப்பான் அது துன்புறினும் நமக்கு இன்னா செய்தலாம்' என்று அறிந்து காத்தல் வேண்டும் ஆகலின், 'அது செய்யாவழி அறிவினான் ஆகுவது உண்டோ' என்றும் கூறினார். இதனான் செய்தல் விலக்கப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பிறிதோருயிர்க்கு உறும் நோயைத் தனக்கு உறும் நோய் போலக் காவாதவிடத்து, அறிவுடையனாகிய வதனால் ஆகுவதொரு பயன் உண்டாகாது.) இஃது அறிவுடையார் செய்யார் என்றது.