குறள் 238

புகழ்

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்

vasaiyaenpa vaiyaththaark kellaam isaiyaennum
yechcham paeraaa vitin


Shuddhananda Bharati

Renown

To men on earth it is a shame
Not to beget the child of fame.


GU Pope

Renown

Fame is virtue's child, they say; if, then,
You childless live, you live the scorn of men.

Not to beget fame will be esteemed a disgrace by the wise in this world.


Mu. Varadarajan

தமக்குப்‌ பின்‌ எஞ்சி நிற்பதாகிய புகழைக்‌ பெறாவிட்டால்‌ உலகத்தார்‌ எல்லார்க்கும்‌ அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்‌.


Parimelalagar

இசை என்னும் எச்சம் பெறாவிடின்-புகழ் என்னும் எச்சம் பெறலாயிருக்க, அது பெறாது ஒழிவராயின்; வையத்தார்க்கு எல்லாம் வசை என்ப - வையகத்தோர்க்கு எல்லாம் அதுதானே வசை என்று சொல்லுவர் நல்லோர்.
விளக்கம்:
('எச்சம்' என்றார். செய்தவர் இறந்து போகத்தான் இறவாது நிற்றலின். இகழப்படுதற்குப் பிறிதொரு குற்றம் வேண்டா என்பது கருத்து.)


Manakkudavar

(இதன் பொருள்) உலகத்தார்க்கெல்லாம் புகழாகிய ஒழிபு பெறாவிடின், அப் பெறாமைதானே வசையாமென்று சொல்லுவா, (எ - று ) மேல் புகழில்லாதாரை யிகழ்ப் வென்றார் அவர் குற்றமில்லாராயின் இகழப் படுவரோவென்றார்க்கு வேறு குற்றம் வேண்டா; புகழின்மைதானே யமையும் மென்றார்.