குறள் 235

புகழ்

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது

naththampol kaedum ulathaakum saakkaadum
viththakark kallaal arithu


Shuddhananda Bharati

Renown

Fame in fall and life in death
Are rare but for the soulful worth.


GU Pope

Renown

Loss that is gain, and death of life's true bliss fulfilled,
Are fruits which only wisdom rare can yield.

Prosperity to the body of fame, resulting in poverty to the body of flesh and the stability to the former arising from the death of the latter, are achievable only by the wise.


Mu. Varadarajan

புகழுடம்பு மேம்படுதலாகும்‌ வாழ்வில்‌ கேடும்‌, புகழ்‌ நிலை நிற்பதாகும்‌ சாவும்‌, அறிவில்‌ சிறந்தவர்க்கு அல்லாமல்‌ மற்றவர்க்கு இல்லை.


Parimelalagar

நத்தம் (ஆகும்) கேடும் - புகழுடம்பிற்கு ஆக்கமாகுங் கேடும்; உளது ஆகும் சாக்காடும் - புகழுடம்பு உளதாகும் சாக்காடும்; வித்தகர்க்கு அல்லால் அரிது - சதுரப்பாடுடையார்க்கு அல்லது இல்லை.
விளக்கம்:
('நந்து' என்னும் தொழிற்பெயர் விகாரத்துடன் 'நத்து' என்றாய், பின் 'அம்' என்னும் பகுதிப் பொருள் விகுதிபெற்று, 'நத்தம்' என்று ஆயிற்று. 'போல்' என்பது ஈண்டு உரையசை. 'ஆகும்' என்பதனை முன்னும் கூட்டி, 'அரிது' என்பதனைத் தனித்தனி கூட்டி உரைக்க. ஆக்கமாகும் கேடாவது, புகழ் உடம்பு செல்வம் எய்தப் பூத உடம்பு நல்கூர்தல். உளதாகும் சாக்காடாவது, புகழ் உடம்பு நிற்கப் பூத உடம்பு இறத்தல். நிலையாதனவற்றான் நிலையின் எய்துவார் வித்தகர் ஆகலின், 'வித்தகர்க்கு அல்லால் அரிது' என்றார். இவை இரண்டு பாட்டானும் புகழ் உடையார் எய்தும் மேன்மை கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) ஆக்கம் போலக் கேடும் உள தானாற்போலச் சாதலும் வல்லவர் கல்லது அரிது,
(என்றவாறு). இது புகழ்பட வாழ்தல் மக்களெல்லார்க்கும் அரிதென்றது.