குறள் 234

புகழ்

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு

nilavarai neelpukal aatrrin pulavaraip
potrraathu puththael ulaku


Shuddhananda Bharati

Renown

From hailing gods heavens will cease
To hail the men of lasting praise


GU Pope

Renown

If men do virtuous deeds by world-wide ample glory crowned,
The heavens will cease to laud the sage for other gifts renowned.

If one has acquired extensive fame within the limits of this earth, the world of the Gods will no longer praise those sages who have attained that world.


Mu. Varadarajan

நிலவுலகின்‌ எல்லையில்‌ நெடுங்காலம்‌ நிற்கவல்ல புகழைச்‌ செய்தால்‌, வானுலகம்‌ (அவ்வாறு புகழ்‌ செய்தாரைப்‌ போற்றுமே அல்லாமல்‌) தேவரைப்‌ போற்றாது.


Parimelalagar

நிலவரை நீள் புகழ் ஆற்றின்-ஒருவன் நில எல்லைக் கண்ணே பொன்றாது நிற்கும் புகழைச் செய்யுமாயின்; புத்தேள் உலகு புதல்வரைப் போற்றாது-புத்தேள் உலகம் அவனையல்லது தன்னை எய்தி நின்ற ஞானிகளைப் பேணாது.
விளக்கம்:
(புகழ் உடம்பான் இவ்வுலகும், புத்தேள் உடம்பான். அவ்வுலகும் ஒருங்கே எய்தாமையின், 'புலவரைப் போற்றாது' என்றார். அவன் இரண்டு உலகும் ஒருங்கு எய்துதல், ''புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவாவான ஊர்தி, எய்துப என்பதம் செய்வினை முடித்து" (புறநா. 27)எனப் பிறராலும் சொல்லப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒருவன் நிலத்தெல்லையின்கண்ணே நெடிய புகழைச் செய்வ னாயின், தேலருலகம் புலவரைப் போற்றாது இவனைப் போற்றும்,
(என்றவாறு). புலவரென்றார் தேவரை; அவர் புலனுடையாராதலான். இது புகழ் செய்தால் ரைத் தேவருலகம் போற்று மென்றது.