குறள் 233

புகழ்

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்

onraa ulakaththu uyarndhtha pukalallaal
ponraathu nitrpathon ril


Shuddhananda Bharati

Renown

Nothing else lasts on earth for e'er
Saving high fame of the giver!


GU Pope

Renown

Save praise alone that soars on high,
Nought lives on earth that shall not die.

There is nothing that stands forth in the world imperishable, except fame, exalted in solitary greatness.


Mu. Varadarajan

உயர்ந்த புகழ்‌ அல்லாமல்‌ உலகத்தில்‌ ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல்‌ நிலைநிற்க வல்லது வேறொன்றும்‌ இல்லை.


Parimelalagar

ஒன்றா உயர்ந்த புகழ் அல்லால் - தனக்கு இணையின்றாக ஓங்கிய புகழல்லது; உலகத்துப் பொன்றாது நிற்பது ஒன்று இல்-உலகத்து இறவாது நிற்பது பிறிதொன்று இல்லை.
விளக்கம்:
(இணை இன்றாக ஓங்குதலாவது: கொடுத்தற்கு அரிய உயிர் உறுப்புப் பொருள்களைக் கொடுத்தமை பற்றி வருதலால் தன்னோடு ஒப்பது இன்றித் தானே உயர்தல். அத்தன்மைத்தாகிய புகழே செய்யப்படுவது என்பதாம். இனி 'ஒன்றா' என்பதற்கு ஒரு வார்த்தையாகச் சொல்லின் எனவும், ஒரு தலையாகப் பொன்றாது நிற்பது எனவும் உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் புகழது சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) உயர்ந்த புகழல்லது இணை யின்றாக உலகத்துக் கெடாது நிற்பது பிறிதில்லை,
(என்றவாறு). இது புகழ் மற்றுள்ள பொருள் போலன்றி அழியாது நிற்கு மென்றது.