குறள் 19

வான் சிறப்பு

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்

thaanam thavamirandum thangkaa viyanulakam
vaanam valangkaa thaenin


Shuddhananda Bharati

The blessing of Rain

Were heaven above to fail below
Nor alms nor penance earth would show.


GU Pope

The Excellence of Rain

If heaven its watery treasures ceases to dispense,
Through the wide world cease gifts, and deeds of 'penitence'.

If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world.


Mu. Varadarajan

மழை பெய்யவில்லையானால்‌, இந்தப்‌ பெரிய உலகத்தில்‌ பிறர்பொருட்டுச்‌ செய்யும்‌ தானமும்‌, தம்‌ பொருட்டுச்‌ செய்யும்‌ தவமும்‌ இல்லையாகும்‌.


Parimelalagar

வியன் உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா - அகன்ற உலகின்கண் தானமும் தவமும் ஆகிய இரண்டு அறமும் உளவாகா; வானம் வழங்காது எனின் - மழை பெய்யாது ஆயின்
விளக்கம்:
(தானமாவது அறநெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடும் கொடுத்தல்; தவம் ஆவது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான உண்டி சுருக்கல் முதலாயின. பெரும்பான்மை பற்றித் தானம் இல்லறத்தின் மேலும், தவம் துறவறத்தின் மேலும் நின்றன.)


Manakkudavar

(இதன் பொருள்) தானமுந் தவமுமாகிய விரண்டறமு முளவாகா; அகன்ற வுலகத் துக்கண் மழை பெய்யாதாயின்,
(என்றவாறு) இது தானமும் தவமுங் கெடுமென்றது.