குறள் 17

வான் சிறப்பு

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

naedungkadalum thanneermai kunrum thatindhthaelili
thaannalkaa thaaki vitin


Shuddhananda Bharati

The blessing of Rain

The ocean's wealth will waste away,
Except the cloud its stores repay.


GU Pope

The Excellence of Rain

If clouds restrain their gifts and grant no rain,
The treasures fail in ocean's wide domain.

Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain).


Mu. Varadarajan

மேகம்‌ கடலிலிருந்து நீரைக்‌ கொண்டு அதனிடத்திலே பெய்யாமல்‌ விடுமானால்‌, பெரிய கடலும்‌ தன்‌ வளம்‌ குன்றிப்‌ போகும்‌.


Parimelalagar

நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும்-அளவில்லாத கடலும் தன் இயல்பு குறையும்; எழிலி தான் தடிந்து நல்காது ஆகிவிடின்-மேகம் தான் அதனைக் குறைத்து அதன்கண் பெய்யாது விடுமாயின்.
விளக்கம்:
(உம்மை சிறப்பு உம்மை. தன்இயல்பு குறைதலாவது நீர்வாழ் உயிர்கள் பிறவாமையும், மணி முதலாயின படாமையும் ஆம். ஈண்டுக் 'குறைத்தல்' என்றது முகத்தலை. அது "கடல்குறை படுத்தநீர் கல் குறைபட எறிந்து" (பரி.பா.20) என்பதனாலும் அறிக. மழைக்கு முதலாய கடற்கும் மழை வேண்டும் என்பதாம். இவை ஏழு பாட்டானும் உலகம் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) நிலமேயன்றி நெடியகடலும் தனது தன்மை குறையும்; மின்னி மழையானது பெய்யாவிடின்,
(என்றவாறு).. தடிந்தென்பதற்கு, கூறு படுத்து என்று பொருளுரைப்பாரு முளர். இது நீருள் வாழ்வனவும் படுவனவுங் கெடுமென்றது. இவை நான்கினானும் பொருட் கேடு கூறினார் ; பொருள்கெட இன்பங்கெடு மென்பதனால் இன்பக்கேடு கூறிற் றிலர்.