குறள் 1324

ஊடலுவகை

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை

pulli vitaaap pulaviyul thonrumaen
ullam utaikkum patai


Shuddhananda Bharati

Sulking charm

In long pout after embrace sweet
A weapon is up to break my heart.


GU Pope

The Pleasures of 'Temporary Variance'

‘Within the anger feigned' that close love's tie doth bind,
A weapon lurks, which quite breaks down my mind.

In prolonged dislike after an embrace there is a weapon that can break my heart.


Mu. Varadarajan

காதலரைத்‌ தழுவிக்‌ கொண்டு விடாமலிருப்பதற்குக்‌ காரணமான ஊடலுள்‌, என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது.


Parimelalagar

'அப்புலவி இனி யாதான் நீங்கும்?' என்றாட்குச் சொல்லியது. புல்லி விடாப் புலவியுள் தோன்றும் - காதலரைப் புல்லிக் கொண்டு பின் விடாமைக்கு ஏதுவாகிய அப்புலவிக்கண்ணே உளதாம்; என் உள்ளம் உடைக்கும் படை. - அதன் மேற்சென்ற என்னுள்ளத்தைக் கெடுக்கும் படைக்கலம்.
விளக்கம்:
('புலவியுள்' என்னும் ஏழாவது வினைநிகழ்ச்சிக்கண் வந்தது. என்னுள்ளம் உடைக்கும் 'படைக்கலம்' என்றது, வணக்கத்தையும் பணிமொழியையும். 'படைக்கலம்' என்றாள். அவற்றான் அப் புலவிஉள்ளம் அழிதலின். புலவி நீங்கும் திறம் கூறியவாறு.)


Manakkudavar

(இதன் பொருள்) என் உள்ளத்தை அழிக்குங் கருவி, புல்லினவிடத்து விட்டுப் புலந்தவிடத்துத் தோன்றும்,
(என்றவாறு). அது புணர்ந்த பின்பு தோன்றாமையால், அதனைக் கெடுக்கும் இன்ப முடைத்தென்று கூறியவாறு. படை - பணிமொழி. இவையெட்டும் தலைமகன் கூற்று .