குறள் 1323

ஊடலுவகை

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து

pulaththalin puththaelnaadu untoh nilaththodu
neeriyaindh thannaar akaththu


Shuddhananda Bharati

Sulking charm

Is there a heaven like sulk beneath
Of hearts that join like water and earth?


GU Pope

The Pleasures of 'Temporary Variance'

Is there a bliss in any world more utterly divine,
Than 'coyness' gives, when hearts as earth and water join?

Is there a celestial land that can please like the feigned dislike of those whose union resembles that of earth and water?


Mu. Varadarajan

நிலத்தோடு நீர்‌ பொருந்திக்‌ கலந்தாற்போன்ற அன்புடைய காதலரிடத்தில்‌ ஊடுவதைவிட இன்பம்‌ தருகின்ற தேவருலகம்‌ இருக்கின்றதோ?


Parimelalagar

இதுவும் அது. 'நிலத்தொடு நீர் இயைந்து அன்னார் அகத்துப் புலத்தலின் - நிலத்தொடு நீர் கலந்தாற்போல ஒற்றுமை உடைய காதலர் மாட்டுப் புலத்தல் போல; புத்தேள் நாடு உண்டோ - நமக்கின்பம் தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ? இல்லை.
விளக்கம்:
(நீர் தான் நின்ற நிலத்தியல்பிற்றாமாறு போலக் காதலரும் தாம் கூடிய மகளிரியல்பினராகலான், அதுபற்றி அவரோடு புலவி நிகழும் என்பாள், 'நிலத்தொடு நீர் இயைந்தன்னாரகத்து' என்றும், 'அவர் நமக்கும் அன்னராகலின், அப்புலவி பின்னே பேரின்பம் பயவாநின்றது' என்பாள். 'புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ?' என்றும் கூறினாள். உவமம் பயன்பற்றி வந்தது.)


Manakkudavar

(இதன் பொருள்) நிலனும் நீரும் பொருந்தினாற்போல ஒன்றுபட்ட நெஞ்சுடை யார்மாட்டுப் புலத்தல் போல், இன்பந்தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ ? நிலத்தொடு நீரியை தலால் அவை வெப்பமுந்தட்பமுங் கூடியிருக்குமாறு போல், இன்பமுந் துன்பமுங்கூட அனுபவிப்பார்மாட் டென்றவாறு.