குறள் 1321

ஊடலுவகை

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு

illai thavaravarkku aayinum ooduthal
vallathu avaralikku maaru


Shuddhananda Bharati

Sulking charm

He is flawless; but I do pout.
So that his loving ways show out.


GU Pope

The Pleasures of 'Temporary Variance'

Although there be no fault in him, the sweetness of his love
Hath power in me a fretful jealousy to move.

Although my husband is free from defects, the way in which he embraces me is such as to make mefeign dislike.


Mu. Varadarajan

அவரிடம்‌ தவறு ஒன்றும்‌ இல்லையானாலும்‌, அவரோடு ஊடுதல்‌, அவர்‌ நம்மேல்‌ மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்யவல்லது.


Parimelalagar

தலைமகள் காரணமின்றிப் புலக்கின்றமை கேட்ட தோழி, 'அங்ஙனம் நீ புலக்கின்றது என்னை?' என்றாட்கு, அவள் சொல்லியது. அவர்க்குத் தவறு இல்லையாயினும் - அவர் மாட்டுத்தவறில்லை ஆயினும்; அவர் அளிக்குமாறு ஊடுதல் வல்லது - நமக்கு அவர் தலையளி செய்கின்றவாறு அவரோடு ஊடுதலை விளைக்க வற்றாகின்றது.
விளக்கம்:
('அவர்க்கு' என்பது, வேற்றுமை மயக்கம். ''அளவிறந்த இன்பத்தராகலின், யான் எய்தற் பாலதாய இத்தலையளி ஒழிந்தாரும் எய்துவர் எனக்கருதி, அது பொறாமையான் ஊடல்நிகழா நின்றது'' என்பதாம்.)


Manakkudavar

ஊடலுவகையாவது தலைமகன் மற்றுள்ள நாள்கள் போலன்றி அன்றையிற் புணர்ச்சி பெரியதோ ரின்பமுடைத்தென்று அதற்குக் காரணமாய ஊடலை வியந்து கூறுதலும் அவ்வண்ணமே தலை பகள் கூறுதலுமாம். இது மேலதனோ டியையும். (இதன் பொருள்) அவர் மாட்டுத் தவறில்லையானாலும், அவர் செய்யும் அருள் ஊடு தலைச் செய்ய வற்று,
(என்றவாறு). இது துன்பம் பயப்பதாகிய புல்வியைச் செய்கின்றது எற்றுக்கென்று வினா விய தோழிக்குத் தலைமகள் கூறியது.