குறள் 1150

அலரறிவுறுத்தல்

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்

thaamvaentin nalkuvar kaathalar yaamvaendum
kelavai yedukkumiv voor


Shuddhananda Bharati

Public clamour

Town raising this cry, I desire
Consent is easy from my sire.


GU Pope

The Announcement of the Rumour

If we desire, who loves will grant what we require;
This town sends forth the rumour we desire!

The rumour I desire is raised by the town (itself); and my lover would if desired consent (to my following him).


Mu. Varadarajan

யாம்‌ விரும்புகின்ற அலரை இவ்வூரார்‌ எடுத்துக்‌ கூறுகின்றனர்‌. அதனால்‌ இனிமேல்‌ காதலர்‌ விரும்பினால்‌ விரும்பியவாறு அதனை உதவுவார்‌.


Parimelalagar

தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய் அலரறிவுறீஇ அவன் உடன்போக்கு நயப்பச்சொல்லியது. யாம் வேண்டும் கெளவை இவ்வூர் எடுக்கும் - உடன் போகற்கு ஏதுவாகல் நோக்கி யாம் பண்டே வரும்புவதாய அலரை இவ்வூர்தானே எடாநின்றது; காதலர் தாம் வேண்டின் நல்குவர் - இனிக் காதலர்தாமும்யாம் வேண்டியக்கால் அதனை இனிதின் நேர்வர்; அதனால் இவ்வலர் நமக்கு நன்றாய் வந்தது.
விளக்கம்:
(எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'நம்கண் காதல் உடைமையின் மறார்' என்பது தோன்றக் 'காதலர்' என்றாள். இவ்விருபது பாட்டும் புணர்தல் நிமித்தம்.)


Manakkudavar

(இதன் பொருள்) யாம் விரும்ப, அலரையும் இவ்வூரார் எடுத்தார்; ஆதலான், இனித் தாங்களே விரும்பிக் கொடுப்பர் நமது காதலர்க்கு,
(என்றவாறு).