குறள் 1100

குறிப்பறிதல்

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல

kannodu kaninai nokkokkin vaaichsotrkal
yenna payanum ila


Shuddhananda Bharati

Signs speak the heart

The words of mouth are of no use
When eye to eye agrees the gaze.


GU Pope

Recognition of the Signs (of Mutual Love)

When eye to answering eye reveals the tale of love,
All words that lips can say must useless prove.

The words of the mouths are of no use whatever, when there is perfect agreement between the eyes(of lovers).


Mu. Varadarajan

கண்களோடு கண்கள்‌ நோக்கால்‌ ஒத்திருந்து அன்பு செய்யுமானால்‌ வாய்ச்சொற்கள்‌ என்ன பயனும்‌ இல்லாமற்‌ போகின்றன.


Parimelalagar

இதுவும் அது. கண்ணோடு கண்இணை நோக்கு ஒக்கின் - காமத்திற்கு உரிய இருவருள் ஒருவர் கண்களோடு ஒருவர் கண்கள் நோக்கால் ஒக்குமாயின்; வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல - அவர் வாய்மை தோன்றச் சொல்லுகின்ற வாய்ச் சொற்கள் ஒரு பயனும் உடைய அல்ல.
விளக்கம்:
(நோக்கால் ஒத்தல்; காதல் நோக்கினவாதல். வாய்ச்சொற்கள்; மனத்தின்கண் இன்றி வாயளவில் தோன்றுகின்ற சொற்கள். இருவர் சொல்லும் கேட்டு உலகியல்மேல் வைத்துக் கூறியவாறு. இருவர் சொல்லுமாவன: அவள் புனங்காவல் மேலும், அவன் வேட்டத்தின் மேலும் சொல்லுவன. பயனில் சொற்களாகலின், இவை கொள்ளப்படா என்பதாம். இவை புணர்தல் நிமித்தம்.)


Manakkudavar

(இதன் பொருள்) கண்களோடு கண்கள் காமக்குறிப்பினால் நோக்கும் நோக்கம் ஒக் குமாயின், வாயினாற் சொல்லுஞ் சொற்கள் ஒருபயனுமுடையவல்ல,
(என்றவாறு). இது சார்தலுறுகின்ற தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.