குறள் 1099

குறிப்பறிதல்

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள

yaethilaar polap pothunokku nokkuthal
kaathalaar kannae ula


Shuddhananda Bharati

Signs speak the heart

Between lovers we do discern
A stranger's look of unconcern.


GU Pope

Recognition of the Signs (of Mutual Love)

The look indifferent, that would its love disguise,
Is only read aright by lovers' eyes.

Both the lovers are capable of looking at each other in an ordinary way, as if they were perfect strangers.


Mu. Varadarajan

புறத்தே அயலார்போல்‌ அன்பில்லாத பொதுநோக்கம்‌ கொண்டு பார்த்தல்‌, அகத்தே காதல்‌ கொண்டவரிடம்‌ உள்ள ஓர்‌ இயல்பாகும்‌.


Parimelalagar

தோழி மதியுடம்படுவாள் தன்னுள்ளே சொல்லியது ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் - முன்னறியாதார் போல ஒருவரையொருவர் பொதுநோக்கத்தான் நோக்குதல்; காதலார் கண்ணே உள - இக்காதலையுடையார் கண்ணே உளவாகாநின்றன.
விளக்கம்:
(பொது நோக்கு; யாவர் மாட்டும் ஒரு தன்மைத்தாய நோக்குதல் தொழில் ஒன்றேயாயினும், இருவர் கண்ணும் நிகழ்தலானும், ஒருவர்கண் தானும் குறிப்பு வேறுபாட்டால் பலவாம் ஆகலானும், 'உள' எனப் பன்மையாற் கூறப்பட்டது. இருவரும் 'மது மறைந்துண்டார் மகிழ்ச்சி போல உள்ளத்துள்ளே மகிழ்தலின்' (இறையனார் 8) அதுபற்றிக் 'காதலார்' என்றும், அது புறத்து வெளிப்படாமையின் 'ஏதிலார் போல' என்றும் கூறினாள்.)


Manakkudavar

(இதன் பொருள்) அயலார்போலப் பொது நோக்கத்தால் நோக்குதல், காதலித்தார் மாட்டே யுள் தாம்,
(என்றவாறு) இது குறித்து நோக்காமையும் உடன்படுதலென்றது.