குறள் 1096

குறிப்பறிதல்

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்

uraaa thavarpol solinum seraaarsol
ollai unarap padum


Shuddhananda Bharati

Signs speak the heart

Their words at first seem an offence
But quick we feel them friendly ones.


GU Pope

Recognition of the Signs (of Mutual Love)

Though with their lips affection they disown,
Yet, when they hate us not, 'tis quickly known.

Though they may speak harshly as if they were strangers, the words of the friendly are soon understood.


Mu. Varadarajan

புறத்தே அயலார்போல்‌ அன்பில்லாத சொற்களைச்‌ சொன்னாலும்‌ அகத்தே பகையில்லாதவரின்‌ சொல்‌ என்பது விரைவில்‌ அறியப்படும்‌.


Parimelalagar

தோழி சேண்படுத்தவழி அவள் குறிப்பு அறிந்த தலைமகன் தன்னுள்ளே சொல்லியது. உறாஅதவர்போல் சொலினும் - புறத்து நொதுமலர்போலக் கடுஞ்சொற் சொன்னாராயினும்; செறாஅர் சொல் ஒல்லை உணரப்படும் - அகத்துச் செறுதலிலாதார் சொல் பிற்பயத்தால் குறையுற்றாரால் கடிதின் அறியப்படும்.
விளக்கம்:
(கடுஞ்சொல் என்பது, 'இவ்விடம் காவல் மிகுதி உடைத்து; வரற்பாலிர் அல்லீர்' என்றல் முதலாயின. 'செறார்' எனவே, அருள் உடைமை பெறப்பட்டது. தன் குறை முடிக்கக் கருதியே சேண்படுக்கின்றவை குறிப்பான் அறிந்து, உலகியல் மேலிட்டுக் கூறியவாறு. இது வருகின்ற பாட்டிற்கும் ஒக்கும்.)


Manakkudavar

(இதன் பொருள்) கூடாதவர் போலச் சொல்லினும், செறுதலில்லாதார் சொல்லை அதற்குக் காரணமாகப் பிறிதொன்று உள்ளதென்று விரைந்தறிதல் வேண்டும். (-) இஃது உறுப்பினாலிசைவுகாட்டி, உரையினால் மறுப்பினும் உடன்படுதலா மென்றது.