குறள் 1094

குறிப்பறிதல்

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்

yaannokkum kaalai nilannokkum nokkaakkaal
thaannokki maella nakum


Shuddhananda Bharati

Signs speak the heart

I look; she droops to earth awhile
I turn; she looks with gentle smile.


GU Pope

Recognition of the Signs (of Mutual Love)

I look on her: her eyes are on the ground the while:
I look away: she looks on me with timid smile.

When I look, she looks down; when I do not, she looks and smiles gently.


Mu. Varadarajan

யான்‌ நோக்கும்போது அவள்‌ நிலத்தை நோக்குவாள்‌; யான்‌ நோக்காதபோது அவள்‌ என்னை நோக்கி மெல்லத்‌ தனக்குள்‌ மகிழ்வாள்‌.


Parimelalagar

நாணினாலும் மகிழ்ச்சியினாலும் அறிந்தது. யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் - யான் தன்னை நோக்குங்கால் தான் எதிர்நோக்காது இறைஞ்சி நிலத்தை நோக்கா நிற்கும்; நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும் - அஃது அறிந்து யான் நோக்காக்கால் தான் என்னை நோக்கித் தன்னுள்ளே மகிழா நிற்கும்.
விளக்கம்:
(மெல்ல வெளிப்படாமல், மகிழ்ச்சியால் புணர்தற் குறிப்பு இனிது விளங்கும். 'மெல்ல நகும்' என்பதற்கு முறுவலிக்கும் என்று உரைப்பாரும் உளர்.)


Manakkudavar

(இதன் பொருள்) யான் தன்னைப்பார்க்குங்கால், தான் நிலத்தைப்பார்க்கும், யான் பாராத விடத்து, தான் பார்த்துத் தோன்றாமை நகும்,
(என்றவாறு). மெல்ல நகுதல் - முகிழமுகிழ்த்தல்.