குறள் 1091

குறிப்பறிதல்

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து

irunokku ivalunkan ullathu orunokku
noinokkon randhnoi marundhthu


Shuddhananda Bharati

Signs speak the heart

Her painted eyes, two glances dart
One hurts; the other heals my heart.


GU Pope

Recognition of the Signs (of Mutual Love)

A double witchery have glances of her liquid eye;
One glance is glance that brings me pain; the other heals again.

There are two looks in the dyed eyes of this (fair one); one causes pain, and the other is the cure thereof.


Mu. Varadarajan

இவளுடைய மை தீட்டிய கண்களில்‌ உள்ளது இருவகைப்‌ பட்ட நோக்கமாகும்‌; அவற்றுள்‌ ஒரு நோக்கம்‌ நோய்‌ செய்யும்‌ நோக்கம்‌; மற்றொன்று அந்‌ நோய்க்கு மருந்தாகும்‌.


Parimelalagar

தலைமகன் தலைமகள் உளப்பாட்டுக் குறிப்பினை அவள் நோக்கினான் அறிந்தது. இவள் உண்கண் உள்ளது இரு நோக்கு - இவளுடைய உண்கண் அகத்ததாய நோக்கு இது பொழுது என்மேல் இரண்டு நோக்காயிற்று; ஒரு நோக்கு நோய் நோக்கு, ஒன்று அந்நோய் மருந்து - அவற்றுள் ஒரு நோக்கு என் கண் நோய் செய்யும் நோக்கு, ஏனையது அந்நோய்க்கு மருந்தாய நோக்கு.
விளக்கம்:
(உண்கண்: மையுண்ட கண். நோய் செய்யும் நோக்கு அவள் மனத்தனாய காமக்குறிப்பினை வெளிப்படுத்துகின்ற நோக்கு. மருந்தாய நோக்குத் தன்கண் நிகழ்கின்ற அன்பு நோக்கு. நோய் செய்யும் நோக்கினைப் பொதுநோக்கு என்பாரும் உளர்; அது நோய் செயின் கைக்கிளையாவதல்லது அகமாகாமை அறிக. அவ்வருத்தந்தீரும் வாயிலும் உண்டாயிற்று என்பதாம்.)


Manakkudavar

குறிப்பறிதலாவது தலைமகளுள்ளக் குறிப்பினைத் தலைமக னறிதல். (இதன் பொருள்) இவள் உண் கண்ணிலுள்ள நோக்கம் இரண்டு வகைத்து; அவ்விரு வகையினும் ஒரு நோக்கு நோய் செய்யும், ஒரு நோக்கு அதற்கு மருந்தாம் , (
(என்றவாறு) நோய்நோக்கென்பது முதல் நோக்கின நோக்கம் ; மருந்து நோக்கென்பது இதனால் வருத்தமுற்ற தலைமகனைத் தலைமகள் உள்ளங்கலங்கி நானோடுகூடி நோக் கின நோக்கம். இது நாணமுடைய பெண்டிரது உள்ளக்கருத்து வெளிப்படுமாறு கூறியது.