குறள் 997

பண்புடைமை

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்

arampolum koormaiya raenum marampolvar
makkatpanpu illaa thavar


Shuddhananda Bharati

Courtesy

The mannerless though sharp like file
Are like wooden blocks indocile.


GU Pope

Courtesy

Though sharp their wit as file, as blocks they must remain,
Whose souls are void of ‘courtesy humane’.

He who is destitute of (true) human qualities (only) resembles a tree, though he may possess the sharpness of a file.


Mu. Varadarajan

மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர்‌, அரம்போல்‌ கூர்மையான அறிவு உடையவராயினும்‌, ஓரறிவுயிராகிய மரத்தைப்‌ போன்றவரே ஆவர்‌.


Parimelalagar

மக்கட்பண்பு இல்லாதவர் - நன்மக்கட்கே உரிய பண்பில்லாதவர்; அரம் போலும் கூர்மையரேனும் - அரத்தின் கூர்மைபோலும் கூர்மையை உடையரேயாயினும்; மரம் போல்வர் - ஓர் அறிவிற்றாய மரத்தினை ஒப்பர்.
விளக்கம்:
(அரம் - ஆகுபெயர். ஓர் அறிவு - ஊற்றினை யறிதல். உவமை இரண்டனுள் முன்னது, தான் மடிவின்றித் தன்னையுற்ற பொருள்களை மடிவித்தலாகிய தொழில் பற்றி வந்தது; ஏனையது, விசேட அறிவின்மையாகிய பண்பு பற்றி வந்தது. அவ்விசேட அறிவிற்குப் பயனாய மக்கட்பண்பு இன்மையின், அதுதானும் இல்லை என்பதாயிற்று.)


Manakkudavar

(இதன் பொருள்) நன்மக்கட்கேயுரிய பண்பில்லாதவர் அரத்தின் கூர்மை போலுங் கூர்மையுடையரே யாயினும், ஓரறி விற்றாய் மாத்தினை யொப்பர்,
(என்றவாறு)