குறள் 992

பண்புடைமை

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு

anputaimai aanra kutippiraththal ivvirandum
panputaimai yennum valakku


Shuddhananda Bharati

Courtesy

Humanity and noble birth
Develop courtesy and moral worth.


GU Pope

Courtesy

Benevolence and high born dignity,
These two are beaten paths of courtesy.

Affectionateness and birth in a good family, these two constitute what is called a proper behaviour to all.


Mu. Varadarajan

அன்புடையவராக இருத்தல்‌, உயர்ந்த குடியில்‌ பிறந்த தன்மை அமைந்திருத்தல்‌ ஆகிய இவ்விரண்டும்‌ பண்பு உடையவராக வாழும்‌ நல்வழியாகும்‌.


Parimelalagar

அன்பு உடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் - பிறர் மேல் அன்பு உடையனாதலும் உலகத்தோடு அமைந்த குடியின்கண் பிறத்தலும் ஆகிய இவ்விரண்டும்; பண்பு உடைமை என்னும் வழக்கு - ஒருவனுக்குப் பண்பு உடைமை என்று உலகத்தார் சொல்லும் நன்னெறி.
விளக்கம்:
(அமைதல் - ஒத்து வருதல். 'குடிப்பிறத்தல்' என்றது பிறந்தார் செயலை. தனித்த வழி ஆகாது இரண்டும் கூடிய வழியே ஆவதென்பது தோன்ற, முற்றும்மை கொடுத்தார். காரணங்கள் காரியமாக உபசரிக்கப்பட்டன. இவை இரண்டு பாட்டானும் பண்பு உடையார் ஆதற் காரணம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பிறர்மேலன்புடையனாதலும் உலகத்தோடமைந்த குடியின் கட் பிறத்தலுமாகிய இவ்விரண்டும், ஒருவனுக்குப் பண்புடைமையென்று உலகத் தார் சொல்லும் நன்னெறி,
(என்றவாறு).