குறள் 990

சான்றாண்மை

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை

saanravar saanraanmai kunrin irunilandhthaan
thaangkaathu manno porai


Shuddhananda Bharati

Sublimity

The world will not more bear its weight
If from high virtue fall the great.


GU Pope

Perfectness

The mighty earth its burthen to sustain must cease,
If perfect virtue of the perfect men decrease.

If there is a defect in the character of the perfect, (even) the great world cannot bear (its) burden.


Mu. Varadarajan

சான்றோரின்‌ சால்பு நிறைந்த பண்பு குறைபடுமானால்‌ இந்தப்‌ பெரிய நிலவுலகமும்‌ தன்‌ பாரத்தைத்‌ தாங்க முடியாமற்‌ போய்விடும்‌.


Parimelalagar

சான்றவர் சான்றாண்மை குன்றின் - பல குணங்களானும் நிறைந்தவர் தம் தன்மை குன்றுவராயின்; இரு நிலந்தான் பொறை தாங்காது - மற்றை இரு நிலத்தானும் தன் பொறையைத் தாங்காதாய் முடியும்.
விளக்கம்:
('தானும்' என்னும் எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. அவர்க்கு அது குன்றாமையும் அதற்கு அது தாங்கலும் இயல்பாகலான் அவை எஞ்ஞான்றும் உளவாகா என்பது தோன்ற நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது ஓகாரம் அசை. இதற்கு 'இரு நிலம் பொறை தாங்குவது சான்றவர் துணையாக வருதலான், அதுவும் அது தாங்கலாற்றாது' என்று உரைப்பாரும் உளர் இவை மூன்று பாட்டானும் அவற்றான் நிறைந்தவரது சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பலகுணங்களானு நிறைந்தவர் தந்தன்மை குன்றுவராயின், மற்றை யிருநிலந்தானுந் தன்பொறையைத் தாங்காதாய் முடியும்,
(என்றவாறு).