குறள் 989

சான்றாண்மை

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்

ooli paeyarinum thaampaeyaraar saanraanmaikku
aali yenappadu vaar


Shuddhananda Bharati

Sublimity

Aeons may change but not the seer
Who is a sea of virtue pure.


GU Pope

Perfectness

Call them of perfect virtue's sea the shore,
Who, though the fates should fail, fail not for evermore.

Those who are said to be the shore of the sea of perfection will never change, though ages maychange.


Mu. Varadarajan

சால்பு என்னும்‌ தன்மைக்குக்‌ கடல்‌ என்று புகழப்‌ படுகின்றவர்‌, ஊழிக்காலத்தின்‌ வேறுபாடுகளே நேர்ந்தாலும்‌ தாம்‌ வேறுபடாமல்‌ இருப்பர்‌.


Parimelalagar

சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார்-சால்புடைமையாகிய கடற்குக் கரை என்று சொல்லப்படுவார்; ஊழி பெயரினும் தாம் பெயரார்-ஏனைக்கடலும் கரையுள் நில்லாமற் காலந் திரிந்தாலும் தாம் திரியார்.
விளக்கம்:
(சாண்றாண்மையது பெருமை தோன்ற அதனைக் கடலாக்கியும். அதனைத் தாங்கிக் கொண்டு நிற்றலின் அஃதுடையாரைக் கரையாக்கியும் கூறினார். "பெருங்கடற்கு ஆழி யனையன் மாதோ" (புறநா. 330) என்றார் பிறரும். ஏகதேச உருவகம்.)


Manakkudavar

(இதன் பொருள்) சால்புடைமையாகிய கடற்குக் கரையென்று சொல்லப்படுவார் எனைக் கடலுங் கரையுணில்லாமற் காலந் திரிந்தாலும் தாந்திரியார்,
(என்றவாறு) 9