குறள் 971

பெருமை

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்

olioruvatrku ulla vaerukkai ilioruvatrku
akhthirandhthu vaalthum yenal


Shuddhananda Bharati

Greatness

A heart of courage lives in light
Devoid of that one's life is night.


GU Pope

Greatness

The light of life is mental energy; disgrace is his
Who says, 'I 'ill lead a happy life devoid of this.'

One's light is the abundance of one's courage; one's darkness is the desire to live destitute of such (a state of mind.)


Mu. Varadarajan

ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும்‌; ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம்‌ இல்லாமலே உயிர்‌ வாழலாம்‌ என்று எண்ணுதலாம்‌.


Parimelalagar

ஒருவற்கு ஒளி உள்ள வெறுக்கை - ஒருவனுக்கு ஒளியாவது பிறராற் செயற்கரிய செய்வேம் என்று கருதும் ஊக்கமிகுதி; ஒருவற்கு இனி அஃது இறந்து வாழ்தும் எனல் - ஒருவனுக்கு மாசாவது அச்செயலை யொழிந்து உயிர் வாழக்கடவேம் என்று கருதுதல்.
விளக்கம்:
(ஒளி - தான் உளனாய காலத்து மிக்குத் தோன்றுதலுடைமை. "ஒளிநிறான் ஓங்குபுகழ் செய்வான்" [நாலடி. செல்வம் நிலையாமை. 9] என்றார் பிறரும், மேலும் 'செயற்கரிய செய்வார் பெரியர்' [குறள். 26] என்றாராயினும், ஈண்டு அவை அளவிறந்த ஒப்புரவு ஈகை முதலியவாம். அவற்றினானாய பெருமையை அதன் காரணத்தின் மேலிட்டு, "உள்ள வெறுக்கை" என்றும், அதுதன்னையே அதன் காரியமாகிய ஒளி ஆக்கியும் கூறினார். இவ்வாறு அதன் எதிர்மறைக்கண்ணும் ஒக்கும். இதனால் பெருமையின் சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

பெருமையாவது சிறியார் செயல் செய்யாமை. அது பின்பு காணப்படும். (இதன் பொருள்) ஒருவனுக்கு இனப்பெருமை புகழாம்; அதனை நீங்கி வாழுமென்று பிறர் சொல்லுதல் ஒருவனுக்கு இளிவாமாதலான்,
(என்றவாறு). இது பெருமையாவது நிறையுடைமை யென்று கூறிற்று.