குறள் 948

மருந்து

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

noinaati noimuthal naati athuthanikkum
vaainaati vaaippach seyal


Shuddhananda Bharati

Medicine

Test disease, its cause and cure
And apply remedy that is sure.


GU Pope

Medicine

Disease, its cause, what may abate the ill:
Let leech examine these, then use his skill.

Let the physician enquire into the (nature of the) disease, its cause and its method of cure and treat it faithfully according to (medical rule).


Mu. Varadarajan

நோய்‌ இன்னதென்று ஆராய்ந்து, நோயின்‌ காரணம்‌ ஆராய்ந்து, அதைத்‌ தணிக்கும்‌ வழியையும்‌ ஆராய்ந்து, உடலுக்குப்‌ பொருந்தும்படியாகச்‌ செய்யவேண்டும்‌.


Parimelalagar

நோய் நாடி-மருத்துவனாயின் ஆதுரன் மாட்டு நிகழ்கின்ற நோயை அதன் குறிகளான் இன்னது என்று துணிந்து; நோய் முதல் நாடி-பின் அது வருதற் காரணத்தை ஆராய்ந்து; அது தணிக்கும் வாய் நாடி - பின் அது தீர்க்கும் உபாயத்தினை அறிந்து; வாய்ப்பச் செயல் - அதனைச் செய்யும்வழிப் பிழையாமற் செய்க.
விளக்கம்:
(காரணம்: உணவு செயல் என முற்கூறிய இரண்டும். அவற்றை ஆயுள்வேதமுடையார் நிதானம் என்ப. அவை நாடுதற்பயன்-நோயினையும் வாயினையும் ஐயமறத் துணிதல். மருந்த செய்தல், உதிரங் களைதல், அறுத்தல், சுடுதல் முதலிய செயல்களெல்லாம் அடங்குதற்கு, 'அது தணிக்கும் வாய்' என்றார். "கழுவாயும் உள"[புற. 34] என்றார் பிறரும். பிழையாமை-பழைய மருத்துவர் செய்து வருகின்ற முறைமையின் தப்பாமை.)


Manakkudavar

(இதன் பொருள்) நோயினையும் ஆராய்ந்து, நோய்வருதற்குக் காரணமும் ஆராய்ந்து, அந்நோய் தீர்க்கும் நெறியையும் ஆராய்ந்து, அது தீர்க்குங்கால் தப்பாமற் செய்க. இது நோய் தீர்க்குமாறு கூறிற்று.