குறள் 946

மருந்து

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்

ilivarindhthu unpaankan inpampol nitrkum
kalipaer iraiyaankan noi


Shuddhananda Bharati

Medicine

Who eats with clean stomach gets health
With greedy glutton abides ill-health.


GU Pope

Medicine

On modest temperance as pleasures pure,
So pain attends the greedy epicure.

As pleasure dwells with him who eats moderately, so disease (dwells) with the glutton who eats voraciously.


Mu. Varadarajan

குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில்‌ இன்பம்‌ நிலை நிற்பது போல, மிகப்‌ பெரிதும்‌ உண்பவனிடத்தில்‌ நோய்‌ நிற்கும்‌.


Parimelalagar

இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம்போல் - அக்குறைதலை நன்று என்று அறிந்த அவ்வாறே உண்பவன்மாட்டு இன்பம் நீங்காது நிலை நிற்குமாறு போல; கழிபேரிரையான்கண் நோய் நிற்கும் - மிகப்பெரிய இரையை விழுங்குவான் மாட்டு நோய் நீங்காது நிலைநிற்கும்.
விளக்கம்:
(அவ்வாறே உண்டல் - உண்ணலாம் அளவில் சிறிது குறை உண்டல். இன்பமாவது வாதமுதலிய மூன்றும் தத்தம் நிலையில் திரியாமையின் மனம் மொழி மெய்கள். அவன் வயத்தவாதலும், அதனான் அறம் முதலிய நான்கும் எய்தலும் ஆம். இரையை அளவின்றி எடுத்து அதனான் வருந்தும் விலங்கொடு ஒத்தலின் 'இரையான்' என்றார். விதி எதிர்மறைகளை உவமமும் பொருளும் ஆக்கியது இரண்டானும் பெறுதற்கு.) --


Manakkudavar

(இதன் பொருள்) அறும் அளவறிந்து உண்பவன் கண் இன்பம் போல் உண்டாம்; மிக உண்பான்கண் நோய்,
(என்றவாறு).