குறள் 945

மருந்து

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு

maarupaadu illaatha unti maruththunnin
oorupaadu illai uyirkku


Shuddhananda Bharati

Medicine

With fasting adjusted food right
Cures ills of life and makes you bright


GU Pope

Medicine

With self-denial take the well-selected meal;
So shall thy frame no sudden sickness feel.

There will be no disaster to one's life if one eats with moderation, food that is not disagreeable.


Mu. Varadarajan

மாறுபாடில்லாத உணவை அளவு மீறாமல்‌ மறுத்து அளவோடு உண்டால்‌, உயிர்‌ உடம்பில்‌ வாழ்வதற்கு இடையூறான நோய்‌ இல்லை.


Parimelalagar

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின் - அம்மூவகை மாறுகோளும் இல்லாத உணவைத் தன் உள்ளம் வேண்டிய அளவினான் அன்றிப் பிணிவாரா அளவினால் ஒருவன் உண்ணுமாயின்; உயிர்க்கு ஊறுபாடு இல்லை - அவன் உயிர்க்குப் பிணிகளால் துன்பம் விளைதல் உண்டாகாது.
விளக்கம்:
(உறுவதனை 'ஊறு' என்றார். அஃது இன்பத்திற்செல்லாதாயிற்று இல்லை என்பது தொடர்பாகலின். துன்பமுறுவது உயிரேயாகலின், அதன்மேல் வைத்துக் கூறினார். மாறுபாடு இல்வழியும் குறைதல் நன்று என்பதாம். இவை நான்கு பாட்டானும் உண்ணப்படுவனவும், அவற்றது அளவும், காலமும், பயனும் கூறப்பட்டன.


Manakkudavar

(இதன் பொருள்) சுவையும் வீரியமும் மாறுபாடில்லாத உணவை நீக்கி யுண்ப னாயின், தன்னுயிர்க்கு வரும் இடையூறு இல்லை,
(என்றவாறு). மாறுபாடு - பலாப்பழந்தின்றால் சுக்குத் தின்றல்.