குறள் 941

மருந்து

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று

mikinum kuraiyinum noiseiyum noolor
valimuthalaa yenniya moonru


Shuddhananda Bharati

Medicine

Wind, bile and phlegm three cause disease
So doctors deem it more or less.


GU Pope

Medicine

The learned books count three, with wind as first; of these,
As any one prevail, or fail; ‘twill cause disease.

If (food and work are either) excessive or deficient, the three things enumerated by (medical)writers, flatulence, biliousness, and phlegm, will cause (one) disease.


Mu. Varadarajan

மருத்துவ நூலோர்‌ வாதம்‌ பித்தம்‌ சிலோத்துமம்‌ என எண்ணிய மூன்றும்‌ அளவுக்கு மிகுந்தாலும்‌ குறைந்தாலும்‌ நோய்‌ உண்டாக்கும்‌.


Parimelalagar

மிகினும் குறையினும் - உணவும் செயல்களும் ஒருவன் பகுதிக்கு ஒத்த அளவின் அன்றி அதனின் மிகுமாயினும் குறையுமாயினும்; நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று நோய் செய்யும் - ஆயுள்வேத முடையாரால் வாதமுதலாக எண்ணப்பட்ட மூன்று நோயும் அவருக்குத் துன்பஞ் செய்யும்.
விளக்கம்:
('நூலோர் எண்ணிய' எனவே, அவர் அவ்வாற்றான் வகுத்த வாதப்பகுதி பித்தப்பகுதி ஐயப்பகுதி என்னும் பகுதிப்பாடும் பெற்றாம். அவற்றிற்கு உணவு ஒத்தலாவது சுவை வீரியங்களானும் அளவானும் பொருந்துதல். செயல்கள் ஒத்தலாவது மனமொழி மெய்களாற் செய்யும் தொழில்களை அவை வருந்துவதற்கு முன்னே ஒழிதல். இவை இரண்டும் இங்ஙனமின்றி மிகுதல் குறைதல் செய்யின், அவை தத்தம் நிலையின் நில்லாவாய் வருத்தும் என்பதாம். காரணம் இரண்டும் அவாய்நிலையான் வந்தன. முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. இதனால் யாக்கைகட்கு இயல்பாகிய நோய் மூவகைத்து என்பதூஉம், அவை துன்பஞ்செய்தற்காரணம் இருவகைத்து என்பதூஉம் கூறப்பட்டன இன்பம் செய்தற்காரணம் முன்னர்கூறுப.)


Manakkudavar

மருந்தாவது யாக்கை நோயுறாமற் செய்யுந் திறங்கூறுதல். மேல் கடியப்படு வன கூறினார். இனிக் கடியப்படாத உணவும் தன்னளவில் மிகுமாயின் துன்பம் பயக்கு மாதலான், அதுவும் அளவு அறிந்துண்ணவேண்டு மென்று அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) உணவும் உறக்கமும் இணைவிழைச்சும் தன்னுடம்பின் அளவிற்கு மிகினும் குறையினும், நூலோரால் எண்ணப்பட்ட வாதமும் பித்தமும் சீதமு மாகிய மூன்றும் நோயைச் செய்யும்,
(என்றவாறு).