குறள் 938

சூது

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது

porulkeduththup poimaetr koleei arulkeduththu
allal ulappikkum koothu


Shuddhananda Bharati

Gambling

Game ruins wealth and spoils grace
Leads to lies and wretched woes.


GU Pope

Gaming (Gambling)

Gambling wastes wealth, to falsehood bends the soul: it drives away
All grace, and leaves the man to utter misery a prey.

Gambling destroys property, teaches falsehood, puts an end to benevolence, and brings in misery(here and hereafter).


Mu. Varadarajan

சூது, உள்ள பொருளை அழித்துப்‌ பொய்யை மேற்கொள்ளச்‌ செய்து அருளையும்‌ கெடுத்துப்‌ பலவகையிலும்‌ துன்பமுற்று வருந்தச்‌ செய்யும்‌.


Parimelalagar

சூது-சூது; பொருள் கெடுத்து-தன்னைப் பயின்றவன் பொருளைக் கெடுத்து; பொய்மேற்கொளீஇ-பொய்யை மேற்கொள்ளப் பண்ணி; அருள் கெடுத்து - மனத்து எழும் அருளைக் கெடுத்து; அல்லல் உழப்பிக்கும் . இவ்வாற்றான் அவனை இருமையினும் துன்பம் உறுவிக்கும்.
விளக்கம்:
(இத்தொழில்கள் மூன்றற்கும் சூது வினைமுதலாகவும்; தோல்வி, வெற்றி, செற்றம் என்பன முறையே கருவிகளாகவும் கொள்க. முன்னதனான் இம்மையினும், ஏனையவற்றான் மறுமையினும் ஆம். 'பொருள் கொடுத்து' என்பது பாடமாயின், அவ்வெச்சத்திற்கு முடிவு 'மேற்கொளீஇ' என்புழி, மேற்கோடலாகிய வினை முதல்வினை.)


Manakkudavar

(இதன் பொருள்) சூது, முற்படப்பொருளைக் கெடுத்து, அதன் பின்னர்ப் பொய்யை மேற்கொள்ளப்பண்ணி, அருளுடைமையைக் கெடுத்து, அல்லற்படுத்துவிக்கும்.