குறள் 936

சூது

அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்

akataaraar allal ulapparkoo thaennum
mukatiyaan moodappat taar


Shuddhananda Bharati

Gambling

Men swallowed by the ogress, dice
Suffer grief and want by that vice.


GU Pope

Gaming (Gambling)

Gambling's Misfortune's other name: o'er whom she casts her veil,
They suffer grievous want, and sorrows sore bewail.

Those who are swallowed by the goddess called "gambling" will never have their hunger satisfied,but suffer the pangs of hell in the next world.


Mu. Varadarajan

சூது என்று சொல்லப்படும்‌ மூதேவியால்‌ விழுங்கப்‌ பட்டவர்‌, வயிறு நிறைய உணவும்‌ உண்ணாதவராகிப்‌ பல துன்பப்பட்டு வருந்துவார்‌.


Parimelalagar

சூது என்னும் முகடியான் மூடப்பட்டார்-தன் பெயர் சொல்லல் மங்கலம் அன்மையின் சூது என்று சொல்லப்படும் முகடியான் விழுங்கப்பட்டார்; அகடு ஆரார் அல்லல் உழப்பர் - இம்மைக்கண் வயிறாரப் பெறார்; மறுமைக்கண் நிரயத் துன்பம் உழப்பர்.
விளக்கம்:
(செல்வங்கெடுத்து நல்வுகுர கொடுத்தல் தொழில் வேறுபடாமையின் 'சூது என்னும் முகடி' என்றும், வெற்றி தோல்விகள் நோக்கி ஒரு பொழுதும் விடாராகலின், ஈண்டு 'அகடு ஆரார்' என்றும், பொய்யும் களவும் முதலிய பாவங்கள் ஈட்டலின் ஆண்டு 'அல்லல் உழப்பர்' என்றும் கூறினார். வயிறாராமை சொல்லவே, ஏனைப் புலன்கள் நுகரப் பெறாமை சொல்ல வேண்டாவாயிற்று. உழப்பர் என்பது எதிர்கால வினைச்சொல்.)


Manakkudavar

(இதன் பொருள்) தமக்கு உள்ளாகிய இந்திரியங்களும் மனமும் இன்புற்று நிறை யப்பெறார்; அதுவேயன்றி, அல்லற்படுவதும் செய்வர் ; சூதாகிய மூதேவி யாலே மறைக்கப்பட்டார்,
(என்றவாறு) மறைத்தல்- நற்குணங்களைத் தோன்றாமல் மறைத்தல்.