குறள் 931

சூது

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று

vaendatrka vaenritinum koothinai vaenrathooum
thoontitrpon meenvilungki atrru


Shuddhananda Bharati

Gambling

Avoid gambling, albeit you win
Gulping bait-hook what does fish gain?


GU Pope

Gaming (Gambling)

Seek not the gamester's play; though you should win,
Your gain is as the baited hook the fish takes in.

Though able to win, let not one desire gambling; (for) even what is won is like a fish swallowing their on in fish-hook.


Mu. Varadarajan

வெற்றியே பெறுவதானாலும்‌ சூதாட்டத்தை விரும்பக்‌ கூடாது. வென்ற வெற்றியும்‌, தூண்டில்‌ இரும்பை இரை என்று மயங்கி மீன்‌ விழுங்கினாற்‌ போன்றது.


Parimelalagar

வென்றிடினும் சூதினை வேண்டற்க - தான் வெல்லும் ஆற்றல் உடையனாயினும் சூதாடலை விரும்பாதொழிக; வென்றதூஉம் தூண்டிற் பொன் மீன் விழுங்கியற்று - வென்று பொருளெய்துவார் உளரால் எனின், அவ் வென்ற பொருள் தானும் இரையான் மறைந்த தூண்டிலிரும்பினை இரை எனக் கருதி மீன் விழுங்கினாற் போலும்.
விளக்கம்:
(வேறல் ஒருதலையன்மையின் 'வென்றிடினும்' என்றும், கருமங்கள் பலவும் கெடுதலின், 'வேண்டற்க' என்றும் கூறினார். எய்தியபொருள் சூதாடுவார் நீங்காமைக்கு இட்டதோர் தளை என்பதூஉம், அதனால் பின் துயருழத்தலும் உவமையால் பெற்றாம்.)


Manakkudavar

சூதாவது சூதாடினால் வரும் குற்றங்கூறுதல். இது மேற்கூறியவற்றோ டொத்தவியல்பிற்றாதலின், அதன்பின் கூறப்பட்டது. (இதன் பொருள்) வெல்லுமாயினும் சூதினை விரும்பாதொழிக; வென்று பெற்ற பொருளும், தூண்டிலின்கண்ணுண்டாகிய பொருளை மீன் விழுங்கினாற் போலும்,
(என்றவாறு). இது பின் கேடு பயக்கு மென்றது.