குறள் 929

கள்ளுண்ணாமை

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று

kaliththaanaik kaaranam kaatduthal keelneerk
kuliththaanaith theeththureei atrru


Shuddhananda Bharati

Not drinking liquor

Can torch search one in water sunk?
Can reason reach the raving drunk?


GU Pope

Not Drinking Palm-Wine

Like him who, lamp in hand, would seek one sunk beneath the wave.
Is he who strives to sober drunken man with reasonings grave.

Reasoning with a drunkard is like going under water with a torch in search of a drowned man.


Mu. Varadarajan

கள்ளுண்டு மயங்கினவனைக்‌ காரணம்‌ காட்டித்‌ தெளிவித்தல்‌, நீரின்கீழ்‌ மூழ்கின ஒருவனைத்‌ தீவிளக்குக்‌ கொண்டு தேடினாற்‌ போன்றது.


Parimelalagar

களித்தானைக் காரணம் காட்டுதல்-கள்ளுண்டு களித்தான் ஒருவனை இஃது ஆகாதென்று பிறனொருவன் காரணம் காட்டித் தெளிவித்தல்; நீர்க்கீழ்க் குறித்தானைத் தீத்துரீஇ அற்று . நீருள் மூழ்கினான் ஒருவனைப் பிறனொருவன் விளக்கினல் நாடுதலை யொக்கும்.
விளக்கம்:
('களித்தானை' என்னும் இரண்டாவது, "அறிவுடை அந்தணன் அவளைக் காட்டென்றானோ" (கலித். மருதம். 7) என்புழிப்போல நின்றது. நீருள் விளக்குச் செல்லாதாற் போல அவன் மனத்துக் காரணம் செல்லாது என்பதாம். இதனான் அவனைத் தெளிவித்தல் முடியாது என்பது கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) கள்ளுண்டு களித்தவனைக் காரணங் காட்டித் தெளிவித்தல், நீரின் கீழே முழுகினானைத் தீயினாற் சுட்டது போலும்,
(என்றவாறு). இது பிறர் சொல்லவும் கேளாரென்றது.