குறள் 928

கள்ளுண்ணாமை

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்

kaliththariyaen yenpathu kaividuka naenjchaththu
oliththathooum aangkae mikum


Shuddhananda Bharati

Not drinking liquor

Don't say "I'm not a drunkard hard"
The hidden fraud is known abroad.


GU Pope

Not Drinking Palm-Wine

No more in secret drink, and then deny thy hidden fraud;
What in thy mind lies hid shall soon be known abroad.

Let (the drunkard) give up saying "I have never drunk"; (for) the moment (he drinks) he will simply betray his former attempt to conceal.


Mu. Varadarajan

கள்ளுண்பவன்‌ :யான்‌ ஒருபோதும்‌ கள்ளுண்டறியேன்‌' என்று சொல்லுவதை விடவேண்டும்‌: நெஞ்சில்‌ ஒளிந்திருந்த குற்றமும்‌ கள்ளுண்டபோதே வெளிப்படும்‌.


Parimelalagar

களித்து அறியேன் என்பது கைவிடுக-மறைந்துண்டு வைத்து யான் கள்ளுண்டறியேன் என்று உண்ணாத பொழுது தம் ஒழுக்கங் கூறுதலையொழிக; நெஞ்சத்து ஒளித்ததும் ஆங்கே மிகும்-அவ்வுண்ட பொழுதே பிறரறியின் இழுக்காம் என்று முன் நெஞ்சத்து ஒளித்த குற்றமும் முன்னையளவின் மிக்கு வெளிப்படுதலான்.
விளக்கம்:
('களித்தறியேன்' எனக் காரணத்தைக் காரியத்தாற் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அது மறைக்கப்படாது என்பது கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) கள்ளுண்டால் களித்தறியே னென்பதனைக் கைவிடுக ; மனத் தின்கண்ணே கரந்ததூஉம் அப்பொழுதே வாய்சோர்ந்து புலப்படும் ; அது கள் ளிற்கு இயல்பு, (எ - று ) உளம் கெடாதென்பார்க்கு இது கூறப்பட்டது.