குறள் 925

கள்ளுண்ணாமை

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்

kaiyari yaamai utaiththae porulkoduththu
maeiyari yaamai kolal


Shuddhananda Bharati

Not drinking liquor

To pay and drink and lose the sense
Is nothing but rank ignorance.


GU Pope

Not Drinking Palm-Wine

With gift of goods who self-oblivion buys,
Is ignorant of all that man should prize.

To give money and purchase unconsciousness is the result of one's ignorance of (one's own actions).


Mu. Varadarajan

விலைப்பொருள்‌ கொடுத்துக்‌ கள்ளுண்டு தன்‌ உடம்பைத்‌ தான்‌ அறியாத நிலையை மேற்கொள்ளுதல்‌, செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்‌.


Parimelalagar

பொருள் கொடுத்து மெய் அறியாமை கொளல்-ஒருவன் விலைப்பொருளைக் கொடுத்துக் கள்ளால் தனக்கு மெய்ம் மறப்பினைக் கொள்ளுதல்; கை அறியாமை உடைத்து-அவன் பழவினைப் பயனாய செய்வதறியாமையைத் தனக்குக் காரணமாக உடைத்து.
விளக்கம்:
(தன்னை அறியாமை சொல்லவே, ஒழிந்தன யாவும் அறியாமை சொல்லல் வேண்டாவாயிற்று. கை அப்பொருட்டாதல் "பழனுடைப் பெருமரம் வீழ்ந்தெனக் கையற்று"


Manakkudavar

(இ-ள்.) பயன் அறியாமை யுடைத்து; பொருளினைக் கொடுத்துத் தம் மெய் அறியாமையைச் செய்யும் கள்ளினைக் கோடல், (எ - று ) இது மேற்கூறிய குற்ற மெல்லாம் பயத்தலின், அதனை அறிவுடையார் செய்யா ரென்றது.