குறள் 924

கள்ளுண்ணாமை

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு

naanyennum nallaal purangkodukkum kallaennum
paenaap paerungkutrrath thaarkku


Shuddhananda Bharati

Not drinking liquor

Good shame turns back from him ashamed
Who is guilty of wine condemned.


GU Pope

Not Drinking Palm-Wine

Shame, goodly maid, will turn her back for aye on them
Who sin the drunkard's grievous sin, that all condemn.

The fair maid of modesty will turn her back on those who are guilty of the great and abominable crime of drunkenness.


Mu. Varadarajan

நாணம்‌ என்று சொல்லப்படும்‌ நல்லவள்‌, கள்‌ என்று சொல்லப்படும்‌ விரும்பத்தகாத பெருங்குற்றம்‌ உடையவர்க்கு எதிரே நிற்காமல்‌ செல்வாள்‌.


Parimelalagar

கள் என்னும் பேணாப் பெருங்குற்றத்தார்க்கு . கள் என்று சொல்லப்படுகின்ற யாவரும் இகழும் மிக்க குற்றத்தினையுடையாரை; நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும்-நாண் என்று சொல்லப்படுகின்ற உயர்ந்தவள் நோக்குதற்கு அஞ்சி அவர்க்கு எதிர்முகமாகாள்.
விளக்கம்:
(காணுதற்கும் அஞ்சி உலகத்தார் சேய்மைக்கண்ணே நீங்குவராகலின் 'பேணா' என்றும், பின் ஒருவாற்றானும் கழுவப்படாமையின், 'பெருங்குற்றம்' என்றும், இழிந்தோர்பால் நில்லாமையின் 'நல்லாள்' என்றும் கூறினார். பெண்பாலாக்கியது வடமொழி முறைமை பற்றி. இவை மூன்று பாட்டானும் ஒளியிழத்தற் காரணம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) நாணமென்று சொல்லப்படுகின்ற நன்மடந்தை பின்பு காட்டிப் போம் ; கள்ளுண்டலாகிய பிறரால் விரும்பப்படாத பெரிய குற்றத்தினையுடை யார்க்கு ,
(என்றவாறு) இது நாணம் போமென்றது.