குறள் 91

இனியவைகூறல்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

insolaal eeram alaiip patiruilavaam
semporul kantaarvaaich sol


Shuddhananda Bharati

Sweet words

The words of Seers are lovely sweet
Merciful and free from deceit.


GU Pope

The Utterance of Pleasant Words

Pleasant words are words with all pervading love that burn;
Words from his guileless mouth who can the very truth discern.

Sweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous.


Mu. Varadarajan

அன்பு கலந்து வஞ்சம்‌ அற்றவைகளாகிய சொற்கள்‌, மெய்ப்பொருள்‌ கண்டவர்களின்‌ வாய்ச்சொற்கள்‌ இன்சொற்களாகும்‌.


Parimelalagar

இன்சொல்-இன்சொல்லாவன; ஈரம் அளைஇப் படிறு இலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்-அன்போடு கலந்து வஞ்சனை இலவாயிருக்கின்ற அறத்தினை உணர்ந்தார் வாயிற்சொற்கள்.
விளக்கம்:
('ஆல்' அசைநிலை. அன்போடு கலத்தல்-அன்புடைமை வெளிப்படுத்தல். படிறு இன்மை - வாய்மை. மெய்யுணர்ந்தார் நெஞ்சிற்கு எல்லாம் செம்மையுடைத்தாய்த் தோன்றலின், 'செம்பொருள்' எனப்பட்டது. 'இலவாம் சொல்' என இயையும். 'வாய்' என வேண்டாது கூறினார், தீயசொல் பயிலா என்பது அறிவித்தற்கு. இதனான் இன்சொற்கு இலக்கணம் கூறப்பட்டது.)


Manakkudavar

இனியவை கூறலாவது கேட்டார்க்கு மனமகிழுஞ் சொற்களைக் கூறுதல். (இதன் பொருள்) இருவர் மாறுபடச் சொன்ன மாற்றத்தினது உண்மைப் பொரு ளைக் கண்டார் கூறும் மெய்யாகிய சொற்களும் இன்சொலாதலானே அருளொடு பொருந்திக் குற்றமிலவாம்,
(என்றவாறு). இஃது ஒருவனைக் கடிந்து சொல்லவேண்டு மிடத்தும் இன்சொல்லாலே கடிய வேண்டுமென்றது.