குறள் 9

கடவுள் வாழ்த்து

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

koalil poriyin kunamilavae yenkunaththaan
thaalai vanangkaath thalai


Shuddhananda Bharati

The praise of God

Like senses stale that head is vain
Which bows not to Eight-Virtued Divine.


GU Pope

The Praise of God

Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head,
Who stands, like palsied sense, is to all living functions dead.

The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation.


Mu. Varadarajan

கேட்காத செவி பார்க்காத கண்‌ முதலியனபோல்‌ எண்‌ குணங்களை உடைய கடவுளின்‌ திருவடிகளை வணங்காதவரின்‌ தலைகள்‌ பயனற்றவைகளாம்‌.


Parimelalagar

கோள் இல் பொறியில் குணம் இல - தத்தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்கை இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலுடைய அல்ல; எண் குணத்தான் தாளை வணங்காத்தலை- எண் வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள்
விளக்கம்:
எண் குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என இவை. இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது. 'அணிமா' வை முதலாக உடையன எனவும், 'கடை இலா அறிவை' முதலான உடையன எனவும் உரைப்பாரும் உளர். 'காணாத கண் முதலியன போல வணங்காத தலைகள் பயன் இல' எனத் தலைமேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும், இனம்பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயன் இல என்பதூஉம் கொள்க. இவை மூன்று பாட்டானும் அவனை நினைத்தலும், வாழ்த்தலும், வணங்கலும் செய்யாவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர்; இறைவனது அடியைச் சேர்ந்தவர், சேராதவ ரதனு எழுந்துவார்,
(என்றவாறு).