குறள் 888

உட்பகை

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி

aramporutha ponpolath thaeyum uramporuthu
utpakai utrra kuti


Shuddhananda Bharati

Secret foe

By secret spite the house wears out
Like gold crumbling by file's contact.


GU Pope

Enmity within

As gold with which the file contends is worn away,
So strength of house declines where hate concealed hath sway.

A family subject to internal hatred will wear out and lose its strength like iron that has been filed away.


Mu. Varadarajan

உட்பகை உண்டான குடி, அரத்தினால்‌ தேய்க்கப்‌ பட்ட இரும்புபோல்‌ வலிமை குறைக்கப்பட்டுத்‌ தேய்ந்து போகும்‌.


Parimelalagar

உட்பகை உற்ற குடி-முன் வளர்ந்து வந்ததாயினும் உட்பகையுண்டாய குடி; அரம் பொருத பொன்போலப் பொருது உரம் தேயும் - அரத்தாற் பொரப்பட்ட இரும்பு போல அதனால் பொரப்பட்டு வலி தேயும்.
விளக்கம்:
('பொருது' என்னும் செயப்பாட்டு வினையெச்சம் 'தேயும்' என்னும் வினை கொண்டது. அஃது, உரத்தின் தொழிலாயினும் குடிமேல் ஏற்றுதலின், வினை முதல்வினை ஆயிற்று. காரியஞ்செய்வது போன்று பொருந்தி மெல்லமெல்லப் பிரிவித்தலான், வலி தேய்ந்துவிடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும், அவன் குடிக்கு வரும் தீங்கு கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) உட்பகையானது உற்ற குடி, அரத்தினால் தேய்க்கப்பட்ட பொன்னைப் போல, அதனால் பொரப்படவே வலிதேயும்,
(என்றவாறு). இஃது உட்பகை அழகு செய்வது போலப் பலத்தைக் கெடுக்கு மென்றது.