குறள் 880

பகைத்திறந்தெரிதல்

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்

uyirppa ularallar manra seyirppavar
seyirppavar semmachiithaikkalaa thaar


Shuddhananda Bharati

Appraising enemies

To breathe on earth they are not fit
Defying foes who don't defeat.


GU Pope

Knowing the Quality of Hate

But breathe upon them, and they surely die,
Who fail to tame the pride of angry enemy.

Those who do not destroy the pride of those who hate (them) will certainly not exist even to breathe.


Mu. Varadarajan

பகைத்தவருடைய தலைமையைக்‌ கெடுக்க முடியாதவர்‌ திண்ணமாக மூச்சுவிடும்‌ அளவிற்கு உயிரோடு வாழ்கின்றவர்‌ அல்லர்‌.


Parimelalagar

செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலாதார் - தம்மொடு பகைப்பாரது தருக்கினைக் கெடுக்கலாய் இருக்க இகழ்ச்சியான் அது செய்யாத அரசர்; உயிர்ப்ப உளரல்லர் மன்ற - பின் உயிர்க்கும் மாத்திரத்திற்கும் உளரல்லர் ஒருதலையாக.
விளக்கம்:
(அவர் வலியராய்த் தம்மைக் களைதல் ஒருதலையாகலின், இறந்தாரேயாவர் என்பதாம். அவர் உயிர்த்த துணையானே தாம் இறப்பர் எனினும் அமையும். இதனான் களையா வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பகைவரது தலைமையைக் கெடுக்க மாட்டாதார், அப்பகைவர் உயிர்க்கு மாத்திரத்திலே அறுதியாகச் சாவர்,
(என்றவாறு). இது பகை கொள்ளுங்கால் வலியாரோடு பகைகோடலாகா தென்றது.