குறள் 873

பகைத்திறந்தெரிதல்

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்

yaemutr ravarinum yaelai thamiyanaaip
pallaar pakaikol pavan


Shuddhananda Bharati

Appraising enemies

Forlorn, who rouses many foes
The worst insanity betrays.


GU Pope

Knowing the Quality of Hate

Than men of mind diseased, a wretch more utterly forlorn,
Is he who stands alone, object of many foeman's scorn.

He who being alone, incurs the hatred of many is more infatuated than even mad men.


Mu. Varadarajan

தான்‌ தனியாக இருந்து பலருடைய பகையைத்‌ தேடிக்‌ கொள்பவன்‌, பித்துப்‌ பிடித்தவரைவிட அறிவில்லாதவனாகக்‌ கருதப்படுவான்‌.


Parimelalagar

தமியனாய்ப் பல்லார் பகை கொள்பவன் - தான் தனியனாய் வைத்துப் பலரோடு பகை கொள்வான்; ஏமுற்றவரினும் ஏழை - பித்துற்றாரினும் அறிவிலன்.
விளக்கம்:
(தனிமை - சுற்றம், நட்பு, படை முதலிய இன்மை. மயக்கத்தால் ஒப்பாராயினும் ஏமுற்றவர் அதனால் தீங்கு எய்தாமையின் தீங்கெய்துதலுமுடைய இவனை 'அவரினும் ஏழை' என்றார். தீங்காவது துணையுள் வழியும் வேறல் ஐயமாயிருக்க, அஃது இன்றியும் பலரோடு பகைகொண்டு அவரால் வேறுவேறு பொருதற் கண்ணும் அழிந்தே விடுதல். இவை மூன்று பாட்டானும் பகை போடற் குற்றம் பொதுவினுஞ் சிறப்பினும் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பித்து உற்றவரினும் அறிவிலன்; தனியனாயிருந்து பலரோடு பகை கொள்ளுமவன்,
(என்றவாறு). இது பலரோடும் பகைகொள்ளலாகா தென்றது.